Saturday , June 28 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / காணா­மல் ஆக்­கப்­பட்­ட­வர்­க­ளின் பிரச்­சினை பரப்புரைகளில் தவிர்த்து கொள்­ளப்­பட வேண்­டும்

காணா­மல் ஆக்­கப்­பட்­ட­வர்­க­ளின் பிரச்­சினை பரப்புரைகளில் தவிர்த்து கொள்­ளப்­பட வேண்­டும்

வலிந்து காணா­மல் ஆக்­கப்­பட்­ட­வர்­க­ளின் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்­வைப் பெற்­றுத்­தர முடி­யா­த­வர்­கள் இந்­தப் பிரச்­சி­னையை தேர்­தல் காலங்­க­ளில் பயன்­ப­டுத்­து­வ­தனை தவிர்த்­துக்­கொள்ள வேண்­டும். பயன்­ப­டுத்­து­வதை நாங்­கள் ஒரு­போ­தும் ஏற்­றுக்­கொள்­ள­மாட்­டோம் என கிளி­நொச்சி வலிந்து காணா­மல் ஆக்­கப்­பட்­ட­வர்­க­ளின் உற­வி­னர்­கள் சங்கத்தின் தலைவி தெரி­வித்­துள்­ளார்.

வடக்கு கிழக்கு காணா­மல் ஆக்­கப்­பட்­ட­வர்­க­ளின் உற­வி­னர்­கள் சங்­கத்­தி­னது தலைவி யோக­ராசா கன­க­ரஞ்­சனி ஊட­கங்­க­ளுக்கு கருத்து தெரி­விக்­கும் போதே இவ்­வாறு தெரி­வித்­துள்­ளார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

போர் முடி­வுக்கு வந்து எட்டு வரு­டங்­களை கடந்த நிலை­யி­லும் காணா­மல் ஆக்­கப்­பட்ட உற­வி­னர்­க­ளுக்கு எவ்­வித தீர்­வும் கிடைக்­க­வில்லை. நம்­பிய எங்­க­ளது பிர­தி­நி­தி­க­ளா­லும் எங்­க­ளுக்கு ஏமாற்­றம். எங்­க­ளது பிரச்­சி ­னை­க­ளுக்­காக வீதி­யில் இறங்கி போராட்­டத்தை ஆரம்­பித்து 315 ஆவது நாளாகவும் இரவு பக­லாக நாங்­கள் பல்­வேறு நெருக்­க­டி­க­ளுக்கு மத்­தி­யில் வீதி­யில் போராடி வரு­கின்­றோம்.

நாங்­கள் எல்­லோ­ரா­லும் கைவி­டப்­பட்­டுள்­ளோம். இந்த புதிய வரு­டத்­தி­லா­வது எங்­க­ளது விட­யத்­தில் அர­சி­யல் தரப்­பி­னர்­கள் அக்­க­றைச் செலுத்த வேண்­டும். எங்­க­ளது உணர்­வு­களை புரிந்­து­ கொண்டு அர­ச­த­லை­வர், மற்­றும் முத­ல­மைச்­சர் ஆகி­யோர் உரிய பதிலை வழங்க வேண்­டும். அதற்கு தமிழ் தலை­மை­கள் அழுத்­தம் கொடுக்க வேண்­டும்– என்­றார்.

Check Also

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது - இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல ”என்னை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ததாக …