Wednesday , June 4 2025
Home / செய்திகள் / இந்தியா செய்திகள் / பஞ்சாப், கோவா சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது

பஞ்சாப், கோவா சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது

பஞ்சாப், கோவா சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது

 

பஞ்சாப், கோவா சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலையுடன் நிறைவடைந்தது. அந்த மாநிலங்களில் நாளை ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

பஞ்சாப் மாநிலத்தில் ஆளும் சிரோமணி அகாலிதளம்-பாஜக கூட்டணி, காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகளுக்கு இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது.

ஆளும் கூட்டணி வேட்பாளர் களுக்காக பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அருண் ஜேட்லி, மனோகர் பாரிக்கர் உள்ளிட்டோர் பிரச்சாரம் செய்தனர். ஆளும் கூட்டணி தரப்பில் சிரோமணி அகாலிதள தலைவரும் மாநில முதல்வருமான பிரகாஷ் சிங் பாதல் முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டுள்ளார்.

காங்கிரஸ் வேட்பாளர்களுக் காக அதன் துணைத் தலைவர் ராகுல் காந்தி, மாநிலத் தலைவர் அமரிந்தர் சிங், அண்மையில் கட்சியில் இணைந்த கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து உள்ளிட்டோர் தீவிர பிரச்சாரம் செய்தனர். அந்த கட்சியின் முதல்வர் வேட்பாளராக அரச பரம்பரையைச் சேர்ந்த அமரிந்தர் சிங் அறிவிக்கப்பட்டுள்ளார்.

ஆம் ஆத்மி தரப்பில் டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். அந்த கட்சி தரப்பில் முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை.

கடைசி நாளான நேற்று மூன்று கட்சிகளின் மாநிலத் தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். நேற்று மாலை 5 மணியுடன் பிரச்சாரம் முடிவுக்கு வந்தது. நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

மொத்தமுள்ள 117 தொகுதி களில் 1,145 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மிக அதிகபட்சமாக காங்கிரஸ் கட்சி 117 இடங்களில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. ஆம் ஆத்மி வேட்பாளர்கள் 112 தொகுதிகளில் போட்டியிடு கின்றனர்.

ஆளும் கூட்டணியில் சிரோமணி அகாலி தளம் 94 இடங்களிலும் பாஜக 23 இடங்களிலும் போட்டியிடுகின்றன.

மாநிலத்தில் ஒரு கோடியே 98 லட்சத்து 79 ஆயிரம் பேர் வாக் குரிமை பெற்றுள்ளனர். அவர்களுக் காக மாநிலம் முழுவதும் 22,600 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட் டுள்ளன. பாகிஸ்தான் எல்லையை ஒட்டி அமைந்துள்ள வாக்குச் சாவடிகள் பதற்றமானவையாக அறிவிக்கப்பட்டுள்ளன.

கோவா சட்டப்பேரவை தேர்தல்

கோவாவில் மொத்தமுள்ள 40 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நாளை ஒரே கட்டமாக சட்டப்பேர வைத் தேர்தல் நடைபெறுகிறது.

இந்த மாநிலத்தில் ஆளும் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி மற்றும் மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சி-சிவசேனா-கோவா சுரக்சா மன்ச் கூட்டணிக்கு இடையே நான்கு முனைப் போட்டி நிலவு கிறது.

கோவா மாநில ஆர்.எஸ்.எஸ். மூத்த தலைவர் சுபாஷ் வெலிங்கர் கடந்த ஆகஸ்ட் மாதம் அந்த அமைப்பில் இருந்து நீக்கப்பட்டார். கடந்த அக்டோபரில் அவர் கோவா சுரக்சா மன்ச் என்ற பெயரில் புதிய கட்சியைத் தொடங்கினார்.

மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சி, சிவசேனாவுடன் அவர் கூட்டணி அமைத்திருப்பது பாஜக வுக்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது. கோவாவில் ஆம் ஆத்மியின் முதல் அரசியல் பிரவேசமும் முக்கிய திருப்பு முனையாகக் கருதப்படுகிறது.

பாஜக தரப்பில் அதன் தற்போ தைய முதல்வர் லட்சுமிகாந்த் பர்சேகர் முதல்வர் வேட்பாளராக முன்நிறுத்தப்பட்டுள்ளார். ஆம் ஆத்மி தரப்பில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி எல்விஸ் கோமஸ் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் தரப்பில் முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை.

கோவா தேர்தல் களத்தில் மொத்தம் 251 வேட்பாளர்கள் உள்ளனர். அவர்களின் எதிர் காலத்தை 11.08 லட்சம் வாக்கா ளர்கள் நிர்ணயிக்க உள்ளனர். மாநிலம் முழுவதும் 1,642 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

வாக்கு எண்ணிக்கை

உத்தரப் பிரதேச மாநிலத்தில் பிப்ரவரி 11, 15, 19, 23, 27, மார்ச் 4, 8 ஆகிய தேதிகளில் ஏழு கட்டங் களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. உத்தராகண்டில் பிப்ரவரி 15-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மணிப்பூர் மாநிலத்தில் மார்ச் 4, 8- ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.

ஐந்து மாநிலங்களிலும் மார்ச் 11-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

 

Tamil News

 

 

 

 

Tamil Technology News

 

Tamilnadu News

 

 

 

 

World Tamil News

 

 

 

 

World Newspapers And sites

Check Also

இந்தியாவில் கொரோனாவால் 3 பேர் பலி – 143 பேர் பாதிப்பு

இந்தியாவில் கொரோனாவால் 3 பேர் பலி – 143 பேர் பாதிப்பு

இந்தியாவில் கொரோனாவால் 3 பேர் பலி – 143 பேர் பாதிப்பு சீனாவின் வூஹான் நகரில் இருந்து பரவ துவங்கிய …