Friday , March 29 2024
Home / செய்திகள் / இந்தியா செய்திகள் / கொரோனா பாதிப்பில்லை என உறுதி செய்யபட்ட நபர் பின்னர் உயிரிழப்பு!

கொரோனா பாதிப்பில்லை என உறுதி செய்யபட்ட நபர் பின்னர் உயிரிழப்பு!

கொரோனா பாதிப்பில்லை என உறுதி செய்யபட்ட நபர் பின்னர் உயிரிழப்பு!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பில்லை என பரிசோதனை முடிவில் தெரியவந்த நிலையிலும் தாய்லாந்து இளைஞர் உயிரிழந்துள்ளார். தாய்லாந்தில் இருந்து தமிழகத்துக்கு 7 பேர் கொண்ட குழு சுற்றுலா வந்தது. இவர்களில் டான் ரோசாக் என்பவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனால் கோவையில் இருந்து அவரை விமானம் மூலம் தாய்லாந்து அனுப்பி வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

அதற்கு முன்னதாக கோவை மருத்துவமனையில் அவருக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும் டானுக்கு சிறுநீரக பிரச்சனையும் இருந்தது தெரியவந்ததையடுத்து அதற்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் டானின் இரத்த மாதிரிகளின் முடிவுகள் சென்னையில் இருந்து கோவைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அதில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என தெரியவந்தது. ஆனால் சிறுநீரக பாதிப்பால் அவர் உயிரிழந்துவிட்டார். இது தொடர்பாக தாய்லாந்து தூதரகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் விரைவில் அவர் உடல் சொந்த நாட்டுக்கு அனுப்பப்படவுள்ளது.

மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள்

பயனுள்ள இணைப்புகள் இங்கே

Tamil News
Tamil Technology News
Tamilnadu News
Tamil Serial
World Tamil News

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv