Tuesday , June 10 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / இன்றே இறுதி நாள் : கோப்பாபுலவு மக்கள் எச்சரிக்கை

இன்றே இறுதி நாள் : கோப்பாபுலவு மக்கள் எச்சரிக்கை

இன்றே இறுதி நாள் : கோப்பாபுலவு மக்கள் எச்சரிக்கை

சொந்த காணிகளை மீளப் பெற்றுத்தருமாறு வலியுறுத்தி கோப்பாபுலவு பிலக்குடியிருப்பு மக்கள் முன்னெடுத்துள்ள போராட்டம் இன்று எட்டாவது நாளை எட்டியுள்ளது.

கடந்த செவ்வாய்கிழமை முதல் மக்கள் இரவு பகலாக பிலக்குடியிருப்பு பகுதியிலுள்ள இராணுவ முகாமிற்கு முன்னால் போராட்டத்தை முன்னெடுத்துவருகின்றனர்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களின் பிள்ளைகள் இன்றும் பாடசாலை செல்ல முடியாத நிலைமை காணப்படுகிறது.

குறித்த மாணவர்கள் பாடசாலை செல்வதற்கான ஒழுங்குகளை செய்து தருவதாக மாவட்ட சிறுவர் நன்னடத்தை அதிகாரி உறுதி வழங்கிய போதிலும் அதற்கான எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என மக்கள் குறிப்பிடுகின்றன.

இதேவேளை நாளைய தினத்திற்குள் தமதுக்கு உரிய தீர்வு வழங்கப்படாவிடின் தமது போராட்ட வடிவம் மாற்றமடையும் என அவர்கள் எச்சரித்துள்ளனர்.

இந்த நிலையில் அவர்கள் தீக்குளிப்பது உயிரை மாய்த்தேனும் தமது சொந்த காணிகளை மீட்க போராடப் போவதாக அம்மக்கள் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீலங்கா விமானப்படையினரால் கடந்த எட்டு ஆண்டுகாளக கையகப்படுத்தப்பட்டுள்ள பிலவுக்குடியிருப்பு கிராமத்திலுள்ள 84 குடும்பங்களுக்கு சொந்தமான 20 ஏக்கர் குடியிருப்பு காணிகளையும் விவசாய நிலங்களையும் விடுவிக்குமாறு வலியுறுத்தியே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

 

Tamil News

 

 

 

 

Tamil Technology News

 

Tamilnadu News

 

 

 

 

World Tamil News

 

 

 

 

World Newspapers And sites

Check Also

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது - இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல ”என்னை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ததாக …