Wednesday , October 15 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / அறு­வ­டை­செய்த நெல்லை சாலை­க­ளில் உல­ர­வி­டும் மாங்­குளம் விவ­சா­யி­கள்!!

அறு­வ­டை­செய்த நெல்லை சாலை­க­ளில் உல­ர­வி­டும் மாங்­குளம் விவ­சா­யி­கள்!!

முல்­லைத்­தீவு மாவட்­டத்­தின் மாங்­கு­ளம் பிர­தே­சத்­தில் அறு­வடை செய்­யும் நெல்லை உலர வைப்­ப­தில் விவ­சா­யி­கள் சிர­மங்­களை எதிர்­கொண்டு வரு­கின்­ற­னர்.

மாங்­கு­ளம் பகு­தி­யில் நெல்லை உல­ர­வைக்­கும் தளங்­கள் இல்­லாத கார­ணத்­தால் இவ்­வாறு நெல்லை சாலை­க­ளில் கொட்டி உல­ர­வைக்­க­வேண்­டிய நிலை ஏற்­பட்­டுள்­ளது. சாலை­ய­ரு­கில் நெல்­லைக் கொட்­டு­வ­தால் போக்­கு­வ­ரத்­துக்கு சிர­மம் ஏற்­பட்­டுள்­ளது. வாக­னச் சார­தி­கள் முகம்­சு­ளிக்­கின்­ற­னர் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

வன்னி மாவட்­டத்­தில் தற்­போது கால­போக அறு­வடை ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளது. ஆங்­காங்கே மழை பெய்து வந்­தா­லும் விவ­சா­யி­கள் ஆர்­வத்­து­டன் அறு­வ­டை­யில் ஈடு­பட்­டுள்­ள­னர். இயந்­தி­ரங்­கள் மூலம் அறு­வடை செய்­யப்­ப­டும் நெல்லை காய­விட்டே மூடை­க­ளாக்­க­வேண்­டும். பண்­டைய கால அறு­வடை முறை­யில் இவ்­வாறு காய­வைக்க வேண்­டிய அவ­சி­யம் இல்லை.

எனவே, சகல இடங்­க­ளி­லும் நெல் உல­ர­வைக்­கும் தளங்­கள் அவ­சி­ய­மா­கும். சம்­பந்­தப்­பட்ட அதி­கா­ரி­கள் இது­தொ­டர்­பில் நட­வ­டிக்கை எடுக்­க­வேண்­டும் என விவ­சா­யி­கள் கோரிக்கை விடுக்­கின்­ற­னர்.

Check Also

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது - இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல ”என்னை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ததாக …