ஊரடங்கு உத்தரவினை மீறிய 26 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கைது!
இன்று காலை 6 மணி முதல் நண்பகல் 12 வரையான காலப்பகுதியில் ஊரடங்கு உத்தரவினை மீறிய 193 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் காவல் துறையினரால் 46 வாகனங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதி முதல் இதுவரையிலான காலப்பகுதியில் ஊரடங்கு உத்தரவினை மீறிய 26 ஆயிரத்து 830 பேர் கைது செய்யப்பட்டுள்ளதோடு 6845 வாகனங்களையும் காவல் துறையினர் கைப்பற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பயனுள்ள இணைப்புகள் இங்கே




