Monday , October 20 2025
Home / செய்திகள் (page 441)

செய்திகள்

News

நேபாளத்தில் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறும் போது தவறி விழுந்து மலையேறும் வீரர் பலி

நேபாளத்தில் நேற்று காலை நப்ட்ஸ் பகுதி வழியாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய சுவிட்சர்லாந்தை சேர்ந்த மலையேறும் வீரர் தவறிவிழுந்து பலியானார். சுவிட்சர்லாந்தை சேர்ந்த மலையேறும் வீரர் யுயெலி ஸ்டெக் (40). நேற்று காலை இவர் நேபாளத்தில் உள்ள நப்ட்ஸ் பகுதி வழியாக இமய மலையின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் ஏறினார். அப்போது அவரது கை தவறிவிட்டது. இதனால் அவர் மிக ஆழமான பள்ளத்தில் விழுந்தார். இதனால் அவர் அதே …

Read More »

விரைவில் அணு குண்டு சோதனை – அமெரிக்காவுக்கு வட கொரியா மிரட்டல்

ஐக்கிய நாடுகள் சபை மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளால் விதிக்கப்பட்ட பொருளாதார தடையை மீறிய வகையில் விரைவில் அணு குண்டு சோதனை நடத்தப்போவதாக வட கொரியா மிரட்டியுள்ளது. கிழக்காசிய கண்டத்தின் கொரிய தீபகற்பத்தில் அமைந்துள்ள முக்கிய நாடான வடகொரியா, கடுமையான பொருளாதார நெருக்கடியில் தத்தளித்து வருகிறது. இருப்பினும், கடந்த 2006-ம் ஆண்டு முதல் உலக நாடுகளின் எதிர்ப்பினை பொருட்படுத்தாமலும், சர்வதேச ஒப்பந்தங்களை புறக்கணித்தும் அணு ஆயுத சோதனைகளை வடகொரியா தொடர்ந்து …

Read More »

தமிழ் மக்களின் உரிமைகளை மையப்படுத்தி கிழக்கில் கூட்டமைப்பின் மேதின நிகழ்வு

‘தமிழ் மக்களின் உரிமைகளை உறுதி செய்வோம்’ எனும் தொனிப்பொருளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மே தின நிகழ்வுகள் கிழக்கு மாகாணத்தில் ஆரம்பமாகியுள்ளன. அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு மருதடி மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தில் இருந்து ஆரம்பமான கூட்டமைப்பின் மே தின ஊர்வலம் அக்கரைப்பற்று பிரதான சுற்றுவட்டம் ஊடாக ஆலையடிவேம்பு தர்மசங்கரி விளையாட்டு மைதானத்தை வந்தடைந்துள்ள நிலையில், அங்கு பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. இதன்போது, வடக்கு- கிழக்கு இணைப்பை வலியுறுத்தியும், அப்பாவி விவசாயிகளின் காணி ஆக்கிரமிப்பை …

Read More »

ஈழத் தமிழரின் அரசியல் நகர்வு திருப்புமுனையில் சென்றுகொண்டிருக்கின்றது: சுமந்திரன்

தற்போதைய ஆட்சியில் சாதகமான பல முன்னேற்றங்கள் நடைபெற்று, ஈழத் தமிழரின் அரசியல் நகர்வு ஒரு திருப்புமுனையில் நகர்ந்துகொண்டிருக்கின்றது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு களுதாவளை கலாசார மண்டபத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற தந்தை செல்வாவின் 40ஆவது நினைவுதின நிகழ்வில், ‘ஜெனீவாத் தீர்மானமும் ஈழத் தமிழர் அரசியலும்’ எனும் தலைப்பில் உரையாற்றிய போதே அவர் மேற்குறித்தவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து உரையாற்றியபோது- ”எல்லோரும் எங்களைக் …

Read More »

மக்களின் இருப்பு கேள்விக்குறியானால் பதவி விலகுவேன்: கோடீஸ்வரன்

“அம்பாறை மாவட்ட மக்களின் இருப்பு கேள்விக்குறியாக்கப்படுமாயின், நான் எனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை துறப்பேன்” என அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வரன் தெரிவித்துள்ளார். அம்பாறை ஆலையடிவேம்பு தர்மசங்கரி விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றுவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மே தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், “நல்லாட்சியை உருவாக்கிய தமிழ் மக்களுக்கான உரிமை இன்றும் கிடைக்காது தொடர்ந்து நிராகரிக்கப்பட்டு வருகின்றது. வடக்கு- …

Read More »

தொழிலாளர் தினத்தை கொண்டாட அருகதையற்று தெருவில் நிற்கின்றோம்: கேப்பாப்பிலவு மக்கள்

“அரசாங்கமும் அரசியல் கட்சிகளும் தொழிலாளர் தினத்தை கொண்டாடி வருகின்ற நிலையில், தொழிலாளர்களாகிய நாம் இத்தினத்தை கொண்டாட முடியாது நடுத்தெருவில் நிற்கின்றோம்” என கேப்பாப்பிலவு மக்கள் ஆதங்கம் வெளியிட்டுள்ளனர். கேப்பாப்பிலவு மக்கள், மே தினமான இன்று (திங்கட்கிழமை) தொழில் உபகரணங்களை வீதியில் வைத்து ஒப்பாரி போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில், அதில் கலந்துகொண்டிருந்த ஒருவரே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 138 குடும்பங்களுக்குச் சொந்தமான 482 ஏக்கர் காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி கேப்பாப்பிலவு பூர்வீக கிராமங்களைச் …

Read More »

தமிழ் அரசியல் கைதி தாக்கப்பட்டமைக்கு விசாரணை கோரல்

கொழும்பு மகசீன் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதியொருவர் கொடூரமான முறையில் தாக்கப்பட்டமை குறித்து பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தப்பட வேண்டுமென, காணாமல்போனோரைத் தேடிக் கண்டறியும் குழு வலியுறுத்தியுள்ளது. அத்தோடு, தாக்குதலை மேற்கொண்ட சிறைச்சாலை அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென கோரி, சிறைச்சாலைகள் அத்தியட்சகரிடம் காணாமல்போனோரைத் தேடிக் கண்டறியும் குழுவின் தலைவர் சுந்தரம் மகேந்திரன் மனுவொன்றையும் கையளித்துள்ளார். கடந்த 1999ஆம் ஆண்டு, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா மீதான தற்கொலைத் தாக்குதல் …

Read More »

தமிழர்களை மீண்டும் ஆயுதமேந்த வைக்க முயற்சிக்கிறதா இந்த அரசு? – சிறிதரன்

மக்களுடைய கண்ணீருக்கும், வலிகளுக்கும் விடை கூற தவறிவரும் இந்த அரசாங்கம், தமிழர்களை மீண்டுமொரு யுத்தம் நோக்கிய பாதைக்கு இட்டுச் செல்ல நினைக்கிறதா என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் கேள்வியெழுப்பியுள்ளார். காணாமல் ஆக்கப்பட்டவர்களை விடுவிக்க கோரி கிளிநொச்சியில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற மே தினக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், “தொழிலாளர்களாக இருந்து அந்தந்த குடும்பங்களை வழிநடத்தி பாதுகாக்க …

Read More »

மே தினப் பாதுகாப்புக்காக 7600 பொலிஸார் களத்தில்!

நாளை நடைபெறவுள்ள மே தினக் கூட்டங்களுக்கும் பேரணிகளுக்கும் பாதுகாப்பு வழங்குவதற்காக 7 ஆயிரத்து 600 பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. இவர்களுள் கொழும்பில் 4100 பேரும், கண்டியில் 3500 பேரும் பணியில் அமர்த்தப்படவுள்ளனர் எனவும், இவர்களுக்கு மேலதிகமாக நாட்டின் ஏனைய பாகங்களில் நடக்கவுள்ள அரசியல் கட்சிப் பேரணிகளுக்கும் கூட்டங்களுக்கும் பாதுகாப்பு வழங்கவும் பொலிஸார் களமிறக்கப்படவுள்ளனர் எனவும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. அத்துடன் கொழும்பிலும் கண்டியிலும் நாளைய …

Read More »

கொழும்பில் மட்டும் 11 மே தினக் கூட்டங்கள்!

நாளை நடைபெறவுள்ள மே தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு கொழும்பிலும் நாட்டின் ஏனைய சில பகுதிகளிலும் மொத்தமாக 17 கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன எனவும், இவற்றுள் அதிகப்படியாக 11 கூட்டங்கள் கொழும்பில் நடைபெறவுள்ளன எனவும் தெரியவருகின்றது. ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினக் கூட்டம் அந்தக் கட்சியில் தலைவரான ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் பொரளை கெம்பல் மைதானத்தில் நாளை மாலை 3 மணியளவில் நடைபெறவுள்ளதுடன் பேரணி பிற்பகல் 2 மணியளவில் மாளிகாவத்தையில் …

Read More »