ஐந்து ஆண்டுகளாக கனடாவில் வசித்து வந்த தமிழ்க் குடும்பம் ஒன்று, புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில் நேற்று சிறிலங்காவுக்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. நேற்றுமாலை மொன்றியல் விமான நிலையத்தில் இருந்து இவர்கள் விமானம் ஒன்றில் ஏற்றி அனுப்பப்பட்டுள்ளனர். லோரன்ஸ் என்பவரை தலைவராக கொண்ட இந்தக் குடும்பத்தினர், மனிதாபிமான அடிப்படையில் கனடாவில் நிரந்தர குடியுரிமைக்கு விண்ணப்பித்திருந்தனர். எனினும் அந்தக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதை அடுத்தே, சிறிலங்காவுக்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். போரின் போது கிழக்கு மாகாணத்தில் …
Read More »கிளிநொச்சி துயிலும் இல்லம் பூங்கா ஆனது!
அண்மையில் மிகவும் உணர்வு பூர்வமாக மாவீரர்தினம் அனுஸ்டிக்கப்ட்ட கிளிநொச்சி கனகபுரம் துயிலும் இல்லத்தில் தாவரவியல் பூங்கா என்ற பெயர் பலகை ஒன்று காணப்பட்டது. குறித்த பெயர் பலகையை கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபை மாற்றியுள்ளதாக தெரியவருகிறது! இதனால் பல சர்ச்சைகளும் எழுந்துள்ளது. இது குறித்து கரைச்சி பிரதேச சபை செயலாளர் கம்சநாதன் அவர்களை தொடர்பு கொண்டு வினவிய போது இந்த பெயர் பலகை கரைச்சி பிரதேச சபையினால் தான் நாட்டப்பட்டது …
Read More »விதை வெங்காயவிலையேற்றம்
விவசாயிகள் விதை வெங்காயத்தின் விலை ஏற்றம் குறித்தும் தட்டுப்பாடு குறித்தும் குழப்பமடைய வேண்டியதில்லை. உண்மை வெங்காய விதையைப் பயன்படுத்தி நாற்று மேடை அமைத்து நாற்றை உரிய வேளையில் நடுகை செய்யலாம். உற்பத்திச் செலவு குறைவு. இந்த முறையில் நல்ல விளைச்சலைப் பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு யாழ்ப்பாண மாவட்ட விவசாயத் திணைக்கள பதில் விவசாயப் பணிப்பாளர் அஞ்சலாதேவி ஸ்ரீரங்கன் தெரிவித்தார். யாழ்ப்பாண மாவட்டத்தில் விதை வெங்காயத்துக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுவ துடன் 50 …
Read More »போதைப்பொருளுக்கு எதிராக சாவகச்சேரியில் சுவரொட்டி!
போதைப் பொருளுக்கு எதிராக, சாவகச்சேரிப் பொலிஸாரால் இன்று சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. ”போதைப் பொருள்கள் அற்றதோர் நாடு சந்தோஷத்தால் நிறைந்த நாளை உருவாக்குவோம் ” எனும் தொனிப்பொருளில் சட்டம் ஒழுங்குகள் மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சு மற்றும் பொலிஸ் போதைப் பொருட்கள் தடுப்புப்பிரிவினர் இணைந்து போதைப் பொருளைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்தவகையில் சாவகச்சேரி பொலிஸாரால், நாவற்குழி பகுதியில் பேருந்துகள், முச்சக்கரவண்டிகள் என்பவற்றுக்கு இன்று காலை முதல் விழிப்புணர்வுச் …
Read More »மாகாண சபைத் தேர்தலுக்கான எல்லை நிர்ணய முன்மொழிவு சமர்ப்பிப்பு
மாகாண சபைத் தேர்தலுக்கான எல்லை நிர்ணயத்துக்காக முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாண மாவட்டத்தில் 8 தொகுதிகள் அந்தவகையில் முன்மொழியப் பட்டுள்ளன. யாழ்ப்பாணம்–தீவகம் ஒன்றிணைக்கப்பட்ட தொகுதியாக முன்மொழிவு சமர்ப்பிக் கப்பட்டுள்ளது. இந்த முன்மொழிவை இலங்கைத் தமிழ் அரசுக்கட்சி மாகாணசபைகள் எல்லை நிர்ணயக் குழுவுக்கு சில நாள்க ளுக்கு முன்னர் சமர்ப்பித்தது. அந்த அறிக்கையில் மேலும் குறிப்பி டப்பட்டுள்ளதாவது: மாகாண சபைத் தேர்தலின் புதிய திருத்தத்துக்கு அமைய 50 வீதம் தொகுதி வாரியாகவும் 50 …
Read More »முல்லைக் காட்டில் புதையல் தோண்டிய ஐவர் கைது!
கடும்மழை பெய்துகொண்டிருக்க, வெள்ளத்துடன் அள்ளுண்டு செல்லும் அபாயத்துக்கு மத்தியில் முத்தை யன்கட்டு காட்டுப் பகுதியில் புதையல் தோண்டும் முயற்சியில் ஈடுபட்ட மந்திரவாதி உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர் எனப் பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவித்ததாவது: உயிராபத்தை எதிர்கொண்ட நிலையிலும் பாதுகாப்பைத் தேடாது தொடர்ந்தும் புதையல் தோண்டும் முயற்சியில் ஈடுபட்டிருந்த அவர்களை சிரமத்தின் மத்தியில் கயிறு கட்டி வெள்ளத்திலிருந்து காப்பாற்றிய பின்னர் கைது செய்ததாகப் பொலிஸார் …
Read More »இராணுவ வசமுள்ள காணிகள் தொடர்பில் மாறுபட்ட விவரங்கள் வெளியீடு
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்புப் பிரதேச செயலர் பிரிவில் படையினரிடம் உள்ள நிலம் தொடர்பில் படையினரால் மாறுபட்ட புள்ளிவிவரங்கள் கூறப்படுவதாக வடக்கு மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது: முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் பிரிவில் இராணுவத்தினரிடம் 200 ஏக்கர் நிலம் மட்டுமே உள்ளதாக இராணுவத்தினரால் கடந்த 28ஆம் திகதி இடம்பெற்ற பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அந்தத் தரவில் …
Read More »கள்ளநோட்டுக்கள் விநியோகித்து வணிகர்களை ஏமாற்றிய கும்பல்!
முல்லைத்தீவு புதுக்குடியிருப்புப் பிரதேசத் தில் சந்தைத்தொகுதி மற்றும் உணவகங்களில் கும்பல் ஒன்று கள்ளநோட்டுக்களை கொடுத்து வணிகர்களை ஏமாற்றியுள்ளது. புதுக்குடியிருப்புச் சந்தைப்பகுதியில் நேற்று நண்பகல் தூள்வியாபாரம் செய்யும் வயோதிபப் பெண் ஒருவரிடமும், மட்பாண்டங்கள் வியாபாரம் செய்யும் பெண் ஒருவரிடமும், பழவியாபாரம் செய்யும் பெண் ஒருவரிடமும் இந்த மோசடி கும்பல் ஆயிரம் ரூபா தாள்களைக் கொடுத்து சிறுதொகையில் பொருள்களை கொள்வனவு செய்து மீதிப்பணத்தை பெற்றுக்கொண்டது. அத்துடன் புடவைக் கடை கள் மற்றும் பான்சிகடைகளிலும் …
Read More »விஷாலுக்கு கடும் எதிர்ப்பு
ஆர்.கே.நகர் தேர்தலில் நடிகர் விஷால் போட்டியிடுவதற்கு நடிகரும், இயக்குனருமான சேரன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஏற்கனவே நடிகர் சங்க நிர்வாகியாகவும், தயாரிப்பாளர் சங்க தலைவராகவும் உள்ள நடிகர் விஷால், நடக்கவுள்ள ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதாக முடிவெடுத்துள்ளார். இதற்கு தமிழ் திரையுலகில் ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியிருக்கிறது. விஷாலின் நடவடிக்கை விஷால் தனது தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவியை ராஜினாமா செய்து விட்டு அரசியலில் இறங்கட்டும். இல்லையேல், தயாரிப்பாளர் சங்கத்தில் நான் உள்ளிருப்புப் …
Read More »சசிகலா கணவர் நடராஜனுக்கு சிறை செல்ல விலக்கு
சொகுசு கார் இறக்குமதி செய்து வரி ஏய்ப்பு செய்த வழக்கில் சசிகலாவின் கணவர் நடராஜனுக்கு விதிக்கப்பட்ட சிறைச் செல்ல தற்காலிமாக விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 1994ம் ஆண்டு வெளிநாட்டிலிருந்து லெக்சஸ் காரை இறக்குமதி செய்த போது ரூ.1.62 கோடி மோசடி செய்த வழக்கில், சசிகலாவின் கணவர் நடராஜன், தமிழரசு பப்ளிகேஷன் நிர்வாகி வி.என்.பாஸ்கரன் மற்றும் இவர்களுக்கு உடந்தையாக இருந்த சில அதிகாரிகள் மீது சுங்கத்துறை வழக்குப் பதிவு செய்தது. அதன்பின் இந்த …
Read More »