சாவகச்சேரியில் விபத்து : வயோதிபர் பலி
யாழ்ப்பாணம் – சாவகச்சேரி ஏ-9 வீதி கல்லடிச்சந்தியில் இடம்பெற்ற விபத்தில் வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இவ் விபத்து இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணியளவில் இடம்பெற்றதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மோட்டார் சைக்கிளும் துவிச்சக்கர வண்டியும் மோதியதாலேயே இவ் விபத்து நேர்ந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
விபத்தின் போது, துவிச்சக்கர வண்டியில் பயணித்த 82 வயதுடைய இளையதம்பி ஆறுமுகம் என்ற முதியவரே படுகாயமடைந்து, சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.




