வலி வடக்கு காணிகளை விடுவியுங்கள் : விஜயரட்ணம் ரெட்ணராஜா
யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள மக்களின் காணிகளை ஒரு மாதகாலத்திற்குள் விடுவிக்குமாறு காங்கேசன் துறை சீமெந்து தொழிற்சாலையின் தொழிற்சங்க தலைவரும் யாழ்பாண பிரஜைகள் குழுவின் தலைவருமான விஜயரட்ணம் ரெட்ணராஜா கேட்டுக்கொண்டுள்ளார்.
வலிகாமம் வடக்கு பகுதி மக்கள் காணிகளை விடுவிக்குமாறு கோரி சத்தியாக்கிர போராட்டங்களை முன்னெடுப்பதற்கு முன்னர் அவற்றை விடுவிக்குமாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.
காங்கேசன் துறை, மயிலிட்டி, பலாலி, ஊரணி, தையிட்டி பகுதி மக்களின் ஒரு சில பகுதிகள் விடுவிக்கப்பட்டுள்ள போதிலும் எஞ்சிய பகுதிகள் இதுவரை விடுவிக்கப்படவில்லை.




