உ.பி. யில் 53 சட்டசபை 4ம் கட்ட தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு துவங்கியது
உ.பி.,யில் 53 சட்டசபைத் தொகுதிகளுக்கு நடைபெறும் 4ம் கட்ட தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு காலை 7 மணிக்கு துவங்கியது.
உத்தரப் பிரதேசத்தில் முதல் 3 கட்ட ஓட்டுப்பதிவுகள் ஏற்கெனவே நடந்து முடிந்துவிட்ட நிலையில், 4வது கட்டமாக 12 மாவட்டங்களில் உள்ள 53 தொகுதிகளுக்கு இன்று(பிப்.,23) தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலில் 680 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மொத்த வாக்காளர் எண்ணிக்கையான 1.84 கோடி பேரில், 84 லட்சம் பேர் பெண்கள். தேர்தலில் மக்கள் கடும் பனியையும் பொருட்படுத்தாமல், காலை முதலே வரிசையில் நின்று ஓட்டளித்து வருகின்றனர்.
உ.பி.,யில் 7 கட்டங்களாக நடைபெறும் தேர்தலில், ஆட்சியை பிடிக்க பா.ஜ., சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகள் முட்டி மோதுகின்றன. அடுத்த கட்ட ஓட்டுப்பதிவுகள் பிப்.,27, மார்ச் 4 மற்றும் 8 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. மார்ச் 11ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெற உள்ளது.




