Tuesday , May 21 2024
Home / தமிழ் கவிதைகள் / விடை தெரியா கேள்விகள் – கவிதை

விடை தெரியா கேள்விகள் – கவிதை

விடை தெரியா கேள்விகள் – கவிதை

பல்நூல்கள் ஆய்ந்ததும்
சால்புடையோர் செவியுற்றும்
சிலபல கேள்விகள் நிற்கின்றன
விடையற்று அனாதைகளாய்…

தத்துவங்களும் அனுபவங்களும்
தத்தளிக்கின்றன
விடைக்கு வித்தின்றி…

கடைநிலை பாமரனுக்கு மட்டுமல்ல
கடைத்தேறிய மேதாவிகளுக்குள்ளும்
கடை விரிக்கின்றன…
விடைதெரியா கேள்விகள்…

விடைதெரியா கேள்விகளுக்கு
விடை தராமலே
விடை பெறுமோ
நம்மிடம் வாழ்க்கை…

எழுதியவர்Usharanikannabiran

 

Tamil News

 

 

 

 

Tamil Technology News

 

Tamilnadu News

 

 

 

 

World Tamil News

 

 

 

 

World Newspapers And sites

 

Check Also

வலை வீசப் போனவரே

வலை வீசப் போனவரே நீந்தவும் துணிவு இல்லை. நீச்சலும் தெரியவில்லை. வறுமையின் பிடியில். இருந்து மீண்டிடவே வலை வீசப் போனவரே….! …