வடக்கு மாகாண சபையின் ஏற்பாட்டில், முள்ளிவாய்க்காலில் நாளைமறுதினம் வியாழக்கிழமை காலை 9.30 மணிக்கு நடைபெறும் நினைவேந்தல் நிகழ்வுக்கான பஸ் ஒழுங்குகள் மாவட்ட ரீதியாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன என்று நினைவேந்தல் குழு சார்பில் வடக்கு மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-
முல்லைத்தீவு மாவட்டம் பஸ் ஒழுங்குகள் – துணுக்காய் பிரதேச செயலகம் முன்பாக காலை 7.30, மாந்தை கிழக்கு பிரதேச செயலகம் முன்பாக காலை 7.30, ஒட்டுசுட்டான் பிரதேச செயலகம் முன்பாக காலை 8 மணி, நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜாவை இந்த 0774188975 அலைபேசி இலக்கத்தின் ஊடாகத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
வள்ளுவர்புரம் (விசுவமடு) பாடசாலை முன்பாக காலை 8மணி, மாகாண சபை உறுப்பினர் ஆண்டி ஐயா புவனேஸ்வரனை இந்த 0770284481 அலைபேசி இலக்கத்தின் ஊடாகத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
தொட்டியடிச்சந்தி (விசுவமடு) முன்பாக காலை 7.30 மணி, த.சிவச்சந்தரமூர்த்தியை இந்த 0775285403 அலைபேசி இலக்கத்தின் ஊடாகத் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
விசுவமடுச்சந்தியிலிருந்து காலை 7.30 மணி, கைவேலி சந்தியிலிருந்து காலை 7.30 மணி, த.யோகேஸ்வரனை இந்த 0772206776 அலைபேசி இலக்கத்தின் ஊடாகத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இவற்றை விட முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக காலை 8 மணி, 8.30 மணி மற்றும் 9 மணி ஆகிய நேரங்களிலும் இலவச போக்குவரத்து சேவை ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
வவுனியா மாவட்டம் பஸ் ஒழுங்குகள் – வவுனியா புதிய பஸ் நிலையம் முன்பாக காலை 7 மணி (இரண்டு பஸ்கள்), வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கத்தை 0710732726 என்ற அலைபேசி இலக்கத்தின் ஊடாகத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்டம் பஸ் ஒழுங்குகள் – கிளிநொச்சி டிப்போ சந்தியிலிருந்து காலை 7.30 மணி (இரண்டு பஸ்கள்), வடக்கு மாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜாவை 0773273629 என்ற அலைபேசி இலக்கத்தின் ஊடாகத் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்டம் பஸ் ஒழுங்குகள் – மன்னார் பஸ் நிலையம் முன்பாக காலை 6 மணி (இரண்டு பஸ்கள்), வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனீஸ்வரனை 0772083020 என்ற அலைபேசி இலக்கத்தின் ஊடாகத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண மாவட்டம் பஸ் ஒழுங்குகள் – தொண்டைமானாறு சந்தி காலை 6.30 மணி, வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தை 0777729020 என்ற அலைபேசி இலக்கத்தின் ஊடாகத் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
கைதடிச் சந்தியில் இருந்து காலை 7.00 மணி, க.அருந்தவபாலனை, 0776186554 என்ற அலைபேசி இலக்கத்தின் ஊடாகத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
காரைநகர் சந்தியிலிருந்து காலை 6.30 மணி, வடக்கு மாகாண சபை உறுப்பினர் திருமதி அனந்தி சசிதரனை 0777447288 என்ற அலைபேசி இலக்கத்தின் ஊடாகத் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலையம் முன்பாக காலை 6.30 மணி, வடக்கு மாகாண சபை உறுப்பினர் அ.பரஞ்சோதியை 0776450292 என்ற அலைபேசி இலக்கத்தின் ஊடாகத் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.