Sunday , June 29 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / இந்திய மீனவர்களின் படகுகளை விடுவிக்க அரசாங்கம் தீர்மானம்

இந்திய மீனவர்களின் படகுகளை விடுவிக்க அரசாங்கம் தீர்மானம்

இந்திய கடற்தொழிலாளர்களின் படகுகளை விடுவிக்கவுள்ளதாக இலங்கை மீன்பிடித்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

தமிழக கடற்தொழிலாளர்கள் மீண்டும் எல்லைத்தாண்டக்கூடாது என்ற கடும் நிபந்தனைக்கு அமையவே படகுகள் விடுவிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலில் 2015ஆம் ஆண்டு இலங்கை கடற்பரப்பில் வைத்து கைப்பற்றப்பட்ட 42 படகுகள் விடுவிக்கப்படவுள்ளன.

கைப்பற்றப்பட்ட காலத்தின் அடிப்படையில் ஏனைய படகுகள் படிப்படியாக விடுவிக்கப்படும் என்றும் கடற்தொழில் அமைச்சு அறிவித்துள்ளது.

Check Also

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது - இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல ”என்னை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ததாக …