Sunday , June 29 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / திஸ்ஸ அத்தநாயக்க வௌிநாடு செல்ல நீதிமன்றம் அனுமதி!

திஸ்ஸ அத்தநாயக்க வௌிநாடு செல்ல நீதிமன்றம் அனுமதி!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க வெளிநாடு செல்ல விதித்திருந்த தடையை தற்காலிமாக நீக்க கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

இதற்கு அமைய எதிர்வரும் 23 ஆம் திகதியில் இருந்து அடுத்த மாதம் 12 ஆம் திகதி வரை வெளிநாடு செல்ல அனுமதி வழங்கி, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி விக்கும் களுவாராச்சி இன்று(செவ்வாய்க்கிழமை) உத்தரவிட்டுள்ளார்.

அவுஸ்திரேலியாவில் உயர்கல்வி கற்று வரும் தனது புதல்வியை பார்க்க செல்ல அனுமதி வழங்குமாறு திஸ்ஸ அத்தநாயக்க விடுத்திருந்த கோரிக்கையை ஆராய்ந்த பின்னர் மேல் நீதிமன்றம் இந்த அனுமதியை வழங்கியுள்ளது.

Check Also

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது - இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல ”என்னை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ததாக …