Tuesday , October 14 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / போர்ப்பாதிப்புகளில் மாற்றங்கள் இல்லை

போர்ப்பாதிப்புகளில் மாற்றங்கள் இல்லை

நீண்­ட­கா­லப் போரால் சொல்­லொண்ணா துன்­பங்­களை அனு­ப­வித்த மக்­க­ளின் மனங்­களை ஆற்­றுப்­ப­டுத்­தக் கூடிய மாற்­றங்­கள் இன்­ன­மும் ஏற்­ப­ட­வில்லை – என அமெ­ரிக்க மிசன் திருச்­ச­பை­யின் முன்­னாள் தலை­வர் அருட்­தந்தை ஈனோக் புனி­த­ராஜ் தெரி­வித்­தார்.

அராலி தேவா­ல­யத்­தில் புது­வ­ருட நள் ளி­ர­வுத் திருப்­ப­லியை ஒப்­புக்­கொ­டுத்து மறை­யுரை ஆற்­று­கை­யி­லேயே அவர் இவ்­வாறு குறிப்­பிட்­டார்.

நாட்­டில் ஆயு­த­மோ­தல் முடி­வுக்கு வந்து எட்டு ஆண்­டு­கள் கடந்­து­விட்­டன. தற்­போ­தைய அரசு ஆட்­சிக்கு வந்து எதிர்­வ­ரும் எட்­டாம் திக­தி­யு­டன் நான்­கா­வது வரு­டத்­தில் கால்­ப­திக்­கி­றது. தற்­போ­தைய அரசு பௌதிக ரீதி­யான ஒரு­சில மாற்­றங்­களை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது. ஒன்­று­கூ­டு­வ­தற்­கும், கருத்­து­களை வெளிப்­ப­டுத்­து­வ­தற்­கு­மான சுதந்­தி­ரம் ஓர­ளவு ஏற்­பட்­டி­ருக்­கின்­றது.

தக­வல்­களை அறிந்­து­கொள்­ளும் உரிமை சட்­ட­ரீ­தி­யான அந்­தஸ்­தைப் பெற்­றி­ருக்­கின்­றது. உயர் பாது­காப்பு வல­யங்­க­ளாக இருந்த மக்­க­ளின் காணி­கள் விடு­விக்­கப்­பட்டு வரு­கின்­றன. போரி­னால் இறந்­த­வர்­களை நினைவு கூர்ந்து அஞ்­ச­லிப்­ப­தற்­கான சூழ்­நி­லை­யும் தோற்­று­விக்­கப்­பட்­டுள்­ளது.

Check Also

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது - இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல ”என்னை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ததாக …