Tuesday , June 24 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / வவுனியாவில் தீர்வின்றி தொடர்கிறது காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களது போராட்டம்

வவுனியாவில் தீர்வின்றி தொடர்கிறது காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களது போராட்டம்

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் வவுனியாவில் முன்னெடுக்கப்படும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்புப் போராட்டம் 75ஆவது நாளாக இன்றும் (செவ்வாய்க்கிழமை) தொடர்கிறது.

வவுனியா வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட குறித்த போராட்டம் தீர்வு எதுவும் எட்டப்படாத நிலையில் முன்னெடுக்கப்படுகின்றது.

அவசரகாலச் சட்டத்தினை இரத்துச் செய்யுமாறும், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் விபரங்கள் விரைவில் அரசாங்கத்தினால் வெளியிட வேண்டுமெனவும் கோரி வடக்கு கிழக்கின் ஐந்து மாவட்டங்களில் மக்கள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Check Also

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது - இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல ”என்னை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ததாக …