கேப்பாபுலவு மக்களைச் சந்தித்தார் நடிகர் தலைவாசல் விஜய்
கேப்பாப்புலவு – பிலவுக்குடியிருப்பு காணி மீட்பு போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை தென்னிந்திய திரைப்பட நடிகர் தலைவாசல் விஜய் சந்தித்துள்ளார்.
பிலவுக்குடியிருப்பு மக்கள் தமது சொந்த நிலங்களை கையகப்படுத்தியுள்ள விமானப் படையினர் அதனை விடுவிக்க வேண்டுமென கோரி, கடந்த 28 நாட்களாக இராணுவ முகாமிற்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த மக்களின் போராட்டக்களத்துக்கு 28 ஆவது நாளான இன்றைய தினம் தென்னிந்திய திரைப்பட நடிகர் தலைவாசல் விஜய் மற்றும் இயக்குநரும் ஈழ உணர்வாளருமான புகழேந்தி தங்கராஜ் ஆகியோர் சென்றுள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற கடல் குதிரைகள் திரைப்படத்தின் இசை வெளியீட்டுக்கு சென்ற இவர்கள், இன்றைய தினம் கேப்பாப்புலவு போராட்டக்களத்திலுள்ள மக்களை சந்தித்து அவர்களுக்கான ஆதரவை வெளியிட்டிருந்ததோடு, மக்களுடன் காலந்துரையாடியுள்ளனர்.




