காஷ்மீர் மாநிலம் அனந்தநாக் மாவட்டத்தில் லஸிபல் என்ற இடத்தில் மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படை வீரர்கள் நேற்று காலை ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அங்கு மறைந்து இருந்த பயங்கரவாதிகள், ரிசர்வ் பாதுகாப்பு படை வீரர்களை குறிவைத்து அவர்கள் வந்த வாகனத்தின் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர்.
இதில் குண்டு பாய்ந்து 3 வீரர்கள் படுகாயம் அடைந்தனர். பயங்கரவாதிகள் சுட்டதால் வாகனத்தின் கதவில் இருந்த கண்ணாடிகள் தெறித்து 2 வீரர்கள் காயம் அடைந்தனர். பின்னர் பயங்கரவாதிகள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.
படுகாயம் அடைந்த 5 வீரர்களும் உடனடியாக அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளை போலீசாரும், பாதுகாப்பு படையினரும் தீவிரமாக தேடி வருகின்றனர்.