Friday , June 27 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / மேலதிக கொடுப்பனவு கோரி யாழ். போதனா வைத்தியசாலை தாதியர் போராட்டம்

மேலதிக கொடுப்பனவு கோரி யாழ். போதனா வைத்தியசாலை தாதியர் போராட்டம்

மேலதிக கொடுப்பனவு கோரி யாழ். போதனா வைத்தியசாலை தாதியர் போராட்டம்

தமக்கான மேலதிக நேரக் கொடுப்பனவு திறைசேரியால் இன்னும் வழங்கப்படவில்லை என தெரிவித்து அரச தாதி உத்தியோகத்தர் சங்க யாழ். போதனா வைத்தியசாலை கிளையினரால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த போராட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) மதியம் 12 மணி முதல் 1 மணிவரை யாழ். போதனா வைத்தியசாலை உட்பகுதியில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தமக்கான மேலதிக நேரக் கொடுப்பனவுகளுக்கு சுகாதார அமைச்சு அனுமதி வழங்கிய போதும் திறைசேரி இன்னுமும் வழங்க வில்லை எனவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

கடந்த காலத்தில் தமக்கான பதவி உயர்வு ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை வழங்கப்பட்ட நிலையில் தற்போது அது பத்து வருடமாக மாற்றியுள்ளமை குறித்தும் கவலை வெளியிட்டுள்ளனர்.

இந்த நிலையில், தாம் மூன்றாம் தரத்திற்கு தரமுயர்த்தப்படுவதற்கு மூன்று வருடங்கள் எடுக்கும் எனவும் அதனை ஆறு வருடங்களுக்கு மாற்றியமைத்து தருமாறும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

அத்துடன், தாதிய பட்டப்படிப்பு முடித்தவர்களை, சுகாதார அமைச்சின் நிர்வாக பொறுப்புகளில் நல்ல பதவிகளை வழங்க வேண்டும் என இதன் போது சுட்டிக்காடியிருந்தனர்.

 

Tamil News

 

 

 

 

Tamil Technology News

 

Tamilnadu News

 

 

 

 

World Tamil News

 

 

 

 

World Newspapers And sites

Check Also

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது - இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல ”என்னை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ததாக …