Tuesday , August 26 2025
Home / Tag Archives: latest tamil (page 11)

Tag Archives: latest tamil

நம்பிவந்த எமக்கு ஏமாற்றமே தொடர்கிறது: காணாமல் போனோரின் உறவினர்கள்

காணாமல் போனோரின் உறவினர்கள்

நம்பிவந்த எமக்கு ஏமாற்றமே தொடர்கிறது: காணாமல் போனோரின் உறவினர்கள் காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் தொடர்பில் தீர்வை பெற்றுத் தருவதாக வாக்குறுதியளித்து எம்மை வரவழைத்திருந்த போதிலும், இங்கு எமக்கு ஏமாற்றமே தொடர்ந்து வருகிறது என வவுனியா மாவட்டத்திற்கான காணாமல் ஆக்கப்பட்டோர் அமைப்பின் தலைவி வனிதா தெரிவித்துள்ளார். முக்கிய அமைச்சர்களுக்கும் காணாமல் போனோரின் உறவினர்களுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (வியாழக்கிழமை) அலரி மாளிகையில் இடம்பெற்றது. குறித்த சந்திப்பை தொடர்ந்து ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே …

Read More »

சி.வி. தலைமையில் எழுக தமிழ் பேரணி ஆரம்பம்

எழுக தமிழ் பேரணி

சி.வி. தலைமையில் எழுக தமிழ் பேரணி ஆரம்பம் காலம் காலமாக தீர்க்கப்படாதுள்ள தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு இணைந்த வடகிழக்கே தீர்வு என்பதையும், சமஷ்டியின் மூலமே தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காணமுடியும் என்பதையும் வலியுறுத்தி கிழக்கு எழுக தமிழ் பேரணி தற்போது எழுச்சியுடன் ஆரம்பமாகியுள்ளது. மட்டக்களப்பு கல்லடி மணிக்கூண்டு கோபுரம் அருகிலிருந்து பேரணி ஆரம்பமாகவுள்ள நிலையில், இதுவரை ஆயிரக்கணக்கான மக்கள் அங்கு கூடியிருப்பதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார். மேலும், பலர் …

Read More »

மட்டக்களப்பில் எழுக தமிழ் பேரணி விழிப்பூட்டல் நடவடிக்கை

எழுக தமிழ் பேரணி

மட்டக்களப்பில் எழுக தமிழ் பேரணி விழிப்பூட்டல் நடவடிக்கை வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் பேரவையால் ஒழுங்கு செய்துள்ள ‘எழுக தமிழ்’ பேரணி தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டும் துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கும் நடவடிக்கை, மட்டக்களப்பு நகரில் இன்று (வியாழக்கிழமை) முன்னெடுக்கப்பட்டது. முன்னாள் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரத்தினம் தமிழ் மக்கள் …

Read More »

தாயக மக்களின் மண்மீட்பு போராட்டத்திற்கு மன்னார் பிரஜைகள் குழு ஆதரவு

போராட்டத்திற்கு மன்னார் பிரஜைகள்

தாயக மக்களின் மண்மீட்பு போராட்டத்திற்கு மன்னார் பிரஜைகள் குழு ஆதரவு படையினர் வசமுள்ள காணிகளை விடுவிக்குமாறு கோரி முல்லைத்தீவு மாவட்டத்தில் கேப்பாபிலவு-பிலக்குடியிருப்பு மற்றும் புதுக்குடியிருப்பு ஆகிய பிரதேசங்களில் நடைபெற்று வரும் சத்தியாக்கிரக போராட்டத்திற்கு மன்னார் மாவட்ட பிரஜைகள் குழு முழுமையான ஆதரவை வழங்குவதாக தெரிவித்துள்ளது. கடந்த கால யுத்தத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்கள், அனாதைகளாக்கப்பட்டிருக்கும் பாடசாலை சிறார்கள் தமது உரிமைகளை பறிகொடுத்த நிலையில் இன்று நடுத்தெருவில் நிர்க்கதியாகியுள்ள நிலையில், இம்மக்களின் போராட்டம் …

Read More »

மஹிந்த ராஜபக்சவின் மூளையில் குறைப்பாடு: எஸ்.பி தெரிவிப்பு

மூளையில் குறைப்பாடு எஸ்.பி.திஸ்ஸாநாயக்க

மஹிந்த ராஜபக்சவின் மூளையில் குறைப்பாடு: எஸ்.பி தெரிவிப்பு மாலபே தனியார் மருத்துவக் கல்லூரிக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச எதிர்ப்பை வெளியிடுவாராயின் அவரின் மூளையில் குறைப்பாடு ஏதும் ஏற்பட்டுள்ளது என்றே கூற வேண்டுமென அமைச்சர் எஸ்.பி.திஸ்ஸாநாயக்க தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதியின் பூரண ஆசிர்வாதத்துடனேயே சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டதாகவும் அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் நேற்றைய தினம் பங்கேற்று உரையாற்றுகையில் அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் …

Read More »

37.500 கோடி ரூபாவை கடனாக பெற தீர்மானம்: முயற்சிக்கின்றது அரசாங்கம்

37.500 கோடி ரூபாவை இந்திரஜித் குமாரசுவாமி

37.500 கோடி ரூபாவை கடனாக பெற தீர்மானம்: முயற்சிக்கின்றது அரசாங்கம் வரவுசெலவுத் திட்டத்தில் நிலவும் பற்றாக்குறையை சமாளிப்பதற்காக இவ்வாண்டில் 37,500 கோடி ரூபாவை (2.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள்) திரட்டுவதற்கு​ ​ஸ்ரீலங்காஅரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்தார். ஒன்றிற்கு மேற்பட்ட பல்வேறு மூலங்களில் இருந்து திரட்டப்படுகின்ற கடன்கள் மற்றும் அரச பிணையங்கள் மூலமாகவே இந்தத் தொகையை திரட்ட எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். மத்திய வங்கியின் …

Read More »

காணிகளை விடுவிப்பதாக அரசாங்கம் வாக்குறுதி: போராட்டம் தொடருமென மக்கள் எச்சரிக்கை

அரசாங்கம் வாக்குறுதி

காணிகளை விடுவிப்பதாக அரசாங்கம் வாக்குறுதி: போராட்டம் தொடருமென மக்கள் எச்சரிக்கை அரச காணிகளை இராணுவத்தின் செயற்பாட்டிற்கு பெற்றுக்கொண்டு பொதுமக்களின் காணிகளை விரைவில் விடுவிப்பதற்கு பரிசீலனை மேற்கொள்ளவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். புதுக்குடியிருப்பு பிரதேச செயலாகத்திற்கு முன்னால் தமது காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி தொடர்போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களில் சிலர் இன்றையதினம் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடியிருந்தனர். இந்த சந்திப்பின்போதே விரைவில் காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் …

Read More »

யாழ். பல்கலை மாணவர்கள் படுகொலை: 5 பொலிஸாரும் விளக்கமறியலில்

யாழ். பல்கலை மாணவர்கள்

யாழ். பல்கலை மாணவர்கள் படுகொலை: 5 பொலிஸாரும் விளக்கமறியலில் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட ஐந்து பொலிஸாரும் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த ஐந்து பொலிஸாரையும் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். நீதவான் நீதிமன்ற நீதிபதி எஸ். சதீஸ்கரன் உத்தரவிட்டுள்ளார். யாழ்ப்பாணம் – கொக்குவில் குளப்பிட்டி சந்தியில் வைத்து கடந்த ஒக்டோபர் …

Read More »

கேப்பாப்பிலவு மக்களிடம் காணிகளை ஒப்படைக்கவும்: இராணுவம் ஜனாதிபதியின் உத்தரவை மீறியுள்ளது

கேப்பாப்பிலவு மக்களிடம் காணிகளை

கேப்பாப்பிலவு மக்களிடம் காணிகளை ஒப்படைக்கவும்: இராணுவம் ஜனாதிபதியின் உத்தரவை மீறியுள்ளது “காணிகள் மீளக் கையளிப்பு தொடர்பில் ஜனாதிபதியினால் வழங்கப்பட்ட உறுதிமொழிகளை பாதுகாப்புப் படையினர் மீறியுள்ளனர். எனவே, கேப்பாப்பிலவு மக்களின் காணிகளை அவர்களிடம் ஒப்படைக்க அரசு உடன் நடவடிக்கை வேண்டும்.” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமாக எம்.ஏ.சுமந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார். வடக்கு மற்றும் கிழக்கிலுள்ள தமிழ் மக்களின் காணிப் பிரச்சினை தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையை …

Read More »

அதிமுக எம்.எல்.ஏக்கள் சுதந்திரமான சட்டசபை வாக்கெடுப்பு நடத்த ஸ்டாலின் வலியுறுத்தல்

அதிமுக எம்.எல்.ஏக்கள்

அதிமுக எம்.எல்.ஏக்கள் சுதந்திரமான சட்டசபை வாக்கெடுப்பு நடத்த ஸ்டாலின் வலியுறுத்தல் அதிமுக எம்.எல்.ஏக்கள் பிணைக் கைதிகளாக உள்ளதால் சுதந்திரமான சட்டசபை வாக்கெடுப்பு நடத்த ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். அதிமுக எம்.எல்.ஏ.க்கள் பிணைக் கைதிகளாக வைக்கப்பட்டுள்ளதால் சட்டசபையில் சுதந்திரமான வாக்கெடுப்பு நடத்த ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக செயல் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தின் அரசியல் சூழல் …

Read More »