Saturday , June 28 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / இலங்கை அரசுக்கு கடும் கண்காணிப்பு வேண்டும்! – ஐ.நாவை வலியுறுத்துகின்றார் ஸ் ரீபன் ரப்

இலங்கை அரசுக்கு கடும் கண்காணிப்பு வேண்டும்! – ஐ.நாவை வலியுறுத்துகின்றார் ஸ் ரீபன் ரப்

இலங்கை அரசுக்கு கடும் கண்காணிப்பு வேண்டும்! – ஐ.நாவை வலியுறுத்துகின்றார் ஸ் ரீபன் ரப்

“போர்க் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பொறுப்புக்கூறல் செயன்முறையை செயற்படுத்த இலங்கை அரசுக்கு கால அவகாசம் வழங்கப்படும்போது, அதற்கான கால அட்டவணையையும் வலுவான கண்காணிப்பையும் ஐ.நா. உறுதிப்படுத்த வேண்டும்.”

– இவ்வாறு வலியுறுத்தியுள்ளார் போர்க்குற்றங்கள் தொடர்பான அமெரிக்காவின் முன்னாள் தூதுவர் ஸ் ரீபன் ரப்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-

“ஐ.நா தீர்மானத்தை நடைமுறைப்படுத்த இலங்கைக்கு கால அவகாசம் வழங்குவதன் ஊடாக, நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையைப் பாதிக்கப்பட்டவர்களுக்கு உறுப்பு நாடுகள் வழங்க வேண்டும்” என்றும் அவர் கோரியுள்ளார்.

* பொறுப்புக்கூறல் செயல்முறைகளை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான கால அட்டவணையை இலங்கை அரசு தர வேண்டும்.

* சிறப்பு சட்டவாளர் அலுவலகம் ஆரம் பிக்கப்பட்டு, சான்றுகள் மற்றும் வழக்குப் பதிவுகளை தயார் செய்ததன் பின்னர் சிறப்பு நீதிமன்றத்தை அமைக்க வேண்டும். இதன்மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தப்படுவதுடன், சான்றுகளும் பாதுகாக்கப்படும். அத்துடன், இந்த அலுவலகம் சட்டமா அதிபர் திணைக்களத்திடமிருந்து சுதந்திரமாக இயங்க வேண்டும். ஐ.நா. தீர்மானத்தில் வாக்குறுதியளித்ததுக்கு அமைவாக சர்வதேச சட்டவாளர்கள், அலுவலர்கள் இந்த அலுவலகத்தில் இணைக்கப்பட வேண்டும்.

*சாட்சிகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாக்கும் சட்டம் சர்வதேச தரத்தில் திருத்தப்பட வேண்டும். மேலும், வெளிநாட்டிலிருந்து சாட்சியமளிக்க முடியும் என்ற நடைமுறையும் இணைப்பட வேண்டும்.

ஆகிய மூன்று விடஇயங்களை ஸ் ரீபன் ரப் கோடிட்டுக் காட்டியுள்ளார்.

மேலும், வவனியா ஜோசப் சித்திரவதை முகாம் தொடர்பில் சர்வதேச உண்மை மற்றும் நீதித் திட்டம் அமைப்பு வெளியிட்ட அறிக்கை தொடர்பிலும் அவர் கருத்து வெளியிட்டுள்ளார்.

“வவுனியா படைத்தலைமையகம் அமைந்துள்ள ஜோசப் முகாமில் சித்திரவதைகள் மற்றும் பாலியல் துன்புறுத்தல்கள் இடம்பெற்றமைக்கான ஆதாரங்கள் உள்ளன என்று சர்வதேச உண்மை மற்றும் நீதித் திட்டம் அமைப்பு அறிக்கை வெளியிட்டது. இலங்கையில் குற்றவாளிகள் தப்பிக்கும் கலாசாரம் உள்ளமை அந்த அறிக்கையின் ஊடாகத் தெளிவாகின்றது” என்றும் ஸ் ரீபன் ரப் குறிப்பிட்டுள்ளார்.

World News

Srilanka News

Tamilnadu News

Video News

Check Also

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது - இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல ”என்னை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ததாக …