Sunday , June 29 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / போராட்டத்தை கடற்படையினருக்கு அஞ்சி கைவிடப்போவதில்லை: முள்ளிக்குளம் மக்கள்

போராட்டத்தை கடற்படையினருக்கு அஞ்சி கைவிடப்போவதில்லை: முள்ளிக்குளம் மக்கள்

கடற்படையினரின் எவ்வித அச்சுறுத்தல்களுக்கும் அஞ்சி நாம் போராட்டத்தை கைவிடப்போவதில்லை என பூர்வீக காணிகளுக்காக மூன்றாவது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள முள்ளிக்குளம் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

தமது பூர்வீக நிலங்களில் நிலை கொண்டுள்ள கடற்படையினரை வெளியேற்றக் கோரி, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள முள்ளிக்குளம் கிராம மக்களை புகைப்படம் எடுத்து கடற்படையினர் தொடர்ந்தும் அச்சுறுத்தி வருகின்ற நிலையிலேயே அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.

முள்ளிக்குளம் கிராம மக்களின் மண்மீட்பு போராட்டம் இன்று (சனிக்கிழமை) மூன்றாவது நாளாக தொடர்ந்து வருகிறது. இந்நிலையில், முள்ளிக்குளம் மக்களுக்கு ஆதரவு தெரிவித்து அருட்தந்தையர்கள், மீனவ அமைப்புக்களின் பிரதிநிதிகள், தொண்டு அமைப்புக்களின் பிரதிநிதிகள், மாகாண சபை உறுப்பினர் வைத்தியர் ஜீ.குணசீலன், மன்னார் நகர சபையின் முன்னாள் உறுப்பினர் எஸ்.ஆர்.குமரேஸ், மன்னார் பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் உள்ளிட்ட பலர் இன்றைய போராட்டத்தில் கலந்துக் கொண்டுள்ளனர்.

Check Also

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது - இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல ”என்னை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ததாக …