“ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்தை இலங்கை அரசு முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும். ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்த நிலைப்பாட்டில் எந்தவித மாற்றமும் இல்லை.”
– இவ்வாறு இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.
இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு பதிவிடப்பட்டுள்ளது.
“நீதியைப் பெற்றுக்கொடுக்கும் விடயத்தில் பாதிக்கப்பட்டவர்களை முன்னிறுத்தியே அந்த நீதி கிடைக்கவேண்டும். அதில் காயங்களை ஆற்றுப்படுத்துவதற்கு வழிவகுக்கப்படவேண்டும்” எனவும் அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
சர்வதேச சமூகமோ பாதிக்கப்பட்டவர்களோ வேறு எதனையும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.