இலங்கையிடம் கப்பம் கோரும் சோமாலிய கடற்கொள்ளையர்கள்
சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட கப்பலை விடுப்பதாயின் அதற்காக கப்பம் கோரப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இலங்கை கொடியுடன் எரிபொருள் ஏற்றி வந்த கப்பல் நேற்றைய தினம் சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டிருந்தது.
துபாய் நிறுவனமொன்றில் பதிவு செய்யப்பட்ட எரிஸ் 13 எனும் மேற்படி கப்பலில் 8 ஸ்ரீலங்கா மாலுமிகள் கடமை புரிவதாக கடற்படை தெரிவித்திருந்தது.
கப்பலை தேடும் ஐரோப்பிய சங்கத்தினர் கொள்ளையர்களை தொடர்பு கொண்ட போதே அவர்கள் கப்பம் கோரியுள்ளனர்.
இரு அதிவேக படகுகளில் வந்தவர்களே இவ்வாறு எரிஸ் 13 கப்பலை கடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, கடத்தப்பட்ட 8 பேரையும் மீட்க உதவுமாறு சோமாலிய அதிகாரிகளிடம் ஸ்ரீ லங்கா அரசாங்கம் கோரியுள்ளதாக கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன தெரிவித்துள்ளார்.
அத்துடன், கப்பலில் உள்ள மாலுமிகளின் விபரங்களை சோமலிய அரசாங்கம் மூலம் அறிவதே நன்மை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு துறைமுகத்திற்கு வந்த இந்த எண்ணெய்க் கப்பல் கடந்த ஜனவரி மாதம் 28ஆம் திகதி புறப்பட்டுச் சென்றதாக துறைமுக அதிகாரிகளிடமிருந்து சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களின் மூலம் தெரிய வருகின்றது.




