இலங்கை கொடியுடன் சென்ற கப்பல் சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தல்
இலங்கை தேசியக் கொடியுடன் சென்ற எரிபொருள் நிரப்பிய கப்பல் ஒன்றை சோமாலிய கடற்கொள்ளையர்கள் கடத்திச் சென்றுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
டுபாய்க்கு சொந்தமான Aris – 13 என்ற இக் கப்பல் எட்டு கப்பல் பணியாளர்களுடன் காணாமல் போயுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறித்த கப்பலில் இருந்து அபாய சமிக்ஞை பிறப்பிக்கப்பட்டதாகவும், பின்னர் கப்பலில் இருந்த கடல் கண்காணிப்பு கட்டமைப்பு செயலிழந்ததாகவும் கடற்கொள்ளை தொடர்பான ஆய்வு நிபுணர்கள் அறிவித்துள்ளனர்.
இரண்டு சிறிய ரக படகுகள் நேற்று (திங்கட்கிமை) மாலை கப்பலை பின் தொடர்ந்ததாக, குறித்த கப்பலின் தளபதி தகவல் வழங்கிய ஒரு சில நிமிடங்களுக்குள் கப்பல் காணாமல் போயுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இக் கப்பலை கடத்தியமை சோமாலிய கடற்கொள்ளையர்கள் கடத்தியிருந்தால், கடந்த 2012ஆம் ஆண்டிற்கு பின்னர் வணிக கப்பல் ஒன்றை சோமாலிய கடற்கொள்ளையர்கள் கடத்தியிருக்கும் முதலாவது சந்தர்ப்பம் இது எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
கப்பலை தேடும் நடவடிக்கையில் பிராந்திய கடற்பாதுகாப்பு பிரிவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.




