Sunday , February 2 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / தேவை­யா­ன­ளவு மழை கிடைத்­தும் எவ­ருமே அதைச் சேமிக்­க­வில்லை

தேவை­யா­ன­ளவு மழை கிடைத்­தும் எவ­ருமே அதைச் சேமிக்­க­வில்லை

தேவை­யான மழை­வீழ்ச்சி கிடைத்­தும் எவ­ருமே மழை­நீ­ரைச் சேமிக்­க­வில்லை. இயன்­ற­ளவு மழை­நீரை கட­லுக்கு அல்­லது தமது பிர­தே­சங்­க­ளி­லி­ருந்து அப்­பு­றப்­ப­டுத்தி விடு­வ­தி­லேயே சக­ல­ரும் குறி­யாக இருக்­கின்­ற­னர். இந்த நிலை மாற­வேண்­டும்.

இவ்­வாறு யாழ்ப்­பா­ணம் திருநெல்­வேலி யிலுள்ள வளி­மண்­ட­ல­வி­யல் திணைக்­க­ளப் பொறுப்­ப­தி­காரி ரி.பிர­தீ­பன் தெரி­வித்­தார்.இது குறித்து அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

கடந்த வரு­டங்­க­ளை­விட இந்த வரு­டம் தேவை­யான அளவு மழை­வீழ்ச்சி கிடைத்­துள்­ளது. ஆனால் அதைச் சேக­ரிப்­ப­தற்­கான திட்­டம் இல்லை. மழை நீரைச் சேக­ரிக்­கா­வி­டின் அது தன்­பாட்­டில் கட­லைச் சென்­ற­டைந்­து­வி­டும். பள்­ள­மான பகு­தி­க­ளில் மழை­நீர் தேங்­கி­னால் அத்­த­கைய இடங்­களை மண் கொண்டு நிரப்­பி­வி­டு­கின்­ற­னர். அல்­லது அந்த இடத்­தி­லி­ருந்து வாய்க்­கால் வெட்­டியோ ஏதா­வது வழி­மு­றை­க­ளைக் கையாண்டோ அந்த இடங்­க­ளி­லுள்ள தண்­ணீரை அகற்­றி­வி­டு­கின்­ற­னர்.

இந்­த­நிலை ஆரோக்­கி­ய­மா­ன­தல்ல.
வெள்­ள­வாய்க்­கால்­களை தார் வீதி­யா­க­வும் கொங்­கி­றீற் வீதி­யா­க­வும் மாற்றி அமைக்­கின்­ற­னர். அதற்­கு­ரிய பொறி­முறை போத­வில்லை. அத­னால் மழை நீர், வெள்ள நீர் தேங்­கு­வது தடைப்­ப­டு­கி­றது.

வெள்­ள­வாய்க்­கால்­க­ளுக்கு அடித்­த­ளத்­துக்கு கொங்­கி­றீற் போடப்­ப­டு­கி­றது. சாதா­ரண வெள்­ள­வாய்க்­கால் ஊடா­கத் தண்­ணீர் பாயும்­போது தரைப் பகு­தி­யான நிலம் தண்­ணீரை மண்­ணுக்­குள் ஊடு­பு­க­வி­டு­கி­றது. அப்­படி குறிப்­பிட்­ட­ளவு தண்­ணீர் ஒவ்­வொரு வெள்­ள­வாய்க்­கால் ஊடா­க­வும் மண்­ணுக்­குள் ஊடு­பு­க­வி­டப்­ப­டு­கி­றது.

ஆனால் தற்­போது வெள்ள வாய்க்­கால்­க­ளின் அடித்­த­ளத்­துக்கு கொங்­கி­றீற் இடு­வ­தால் மழை நீர் நிலத்­துக்­குள் ஊடு­பு­கு­வது தடைப்­ப­டு­கி­றது. அத­னால் எமக்­குத் தண்­ணீர் கிடைக்­கா­மல் போகி­றது.

தண்­ணீரை நிலம் தன்பாட்­டில் சேக­ரிப்­ப­தைக்­கூட நாங்­கள் கொங்­கி­றீற் மூல­மா­கத் தடுத்­து­வி­டு­கி­றோம். அறிந்தோ அறி­யா­மலோ இந்­தத் தவ­றைச் செய்­து­கொண்­டி­ருக்­கி­றோம். இந்த முறையை கிராம மக்­கள் தொடக்­கம் அனை­வ­ருமே கைவி­ட­வேண்­டும்.எனவே இந்த விட­யத்­தில் அதி­கா­ரி­கள் மட்­டு­மன்றி கிராம மக்­க­ளும் சிந்­தித்து உணர்ந்து செயற்படவேண்­டும்– என்­றார்.

Check Also

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது - இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல ”என்னை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ததாக …