Thursday , March 28 2024
Home / செய்திகள் / தமிழ்நாடு செய்திகள் / சசிகலா சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் 14-ந்தேதி தீர்ப்பு? சுப்ரீம் கோர்ட்டு

சசிகலா சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் 14-ந்தேதி தீர்ப்பு? சுப்ரீம் கோர்ட்டு

சசிகலா சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் 14-ந்தேதி தீர்ப்பு? சுப்ரீம் கோர்ட்டு

சசிகலா மீதான சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் வருகிற செவ்வாய்க்கிழமை இறுதி தீர்ப்பு வர உள்ளதாக சுப்ரீம் கோர்ட்டு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழ்நாட்டில் 1991 முதல் 96 வரை ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்த போது வருமானத்துக்கு அதிகமாக ரூ.66 கோடி அளவுக்கு சொத்து சேர்த்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

இதில் ஜெயலலிதாவுடன் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

சுமார் 18 ஆண்டுகளாக நடந்த இந்த வழக்கில் கடந்த 2014-ம் ஆண்டு செப்டம்பர் 27-ந்தேதி பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

அதில் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட 4 பேருக்கும் தலா 4 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி குன்கா தீர்ப்பு கூறினார்.

இதை எதிர்த்து ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட 4 பேரும் கர்நாடக ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்தனர். இதை விசாரித்த நீதிபதி குமாரசாமி ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரையும் விடுதலை செய்து தீர்ப்பு கூறினார்.

இந்த தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம்கோர்ட்டில் கர்நாடக அரசு மேல் முறையீடு செய்தது. இதே போல் தி.மு.க. பொதுச்செயலாளர் அன்பழகனும் சுப்ரீம்கோர்ட்டில் தீர்ப்பை எதிர்த்து மனுதாக்கல் செய்தார்.

இந்த வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 7-ந்தேதி இறுதி வாதங்கள் முடிந்த நிலையில் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பை ஒத்திவைத்தனர். இப்போது இந்த வழக்கில் வருகிற செவ்வாய்க்கிழமை (14-ந்தேதி) இறுதி தீர்ப்பு வர உள்ளதாக சுப்ரீம் கோர்ட்டு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஜெயலலிதா கடந்த டிசம்பர் 5-ந்தேதி மரணம் அடைந்து விட்டதால் அவரை இந்த வழக்கில் இருந்து நீக்கி விட்டு சசிகலா, இளவரசி, சுதாகரன் மீது இறுதி தீர்ப்பு கூறப்படும் என்று வக்கீல்கள் தெரிவித்தனர்.

 

Tamil News

 

 

 

 

Tamil Technology News

 

Tamilnadu News

 

 

 

 

World Tamil News

 

 

 

 

World Newspapers And sites

Check Also

திருமணம் முடிந்த அன்றே மனைவியை கல்லால் அடித்து கொன்று கணவன் தானும் தற்கொலை

திருமணம் முடிந்த அன்றே மனைவியை கல்லால் அடித்து கொன்று கணவன் தானும் தற்கொலை

திருமணம் முடிந்த அன்றே மனைவியை கல்லால் அடித்து கொன்று கணவன் தானும் தற்கொலை முதலிரவில் புது பொண்டாட்டியை கடப்பாறையாலேயே அடித்து …