Sunday , June 29 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / காலி மாவட்ட செயலகத்தின் இணையதளம் மீது சைபர் தாக்குதல்

காலி மாவட்ட செயலகத்தின் இணையதளம் மீது சைபர் தாக்குதல்

காலி மாவட்ட செயலகத்தின் இணையத்தளம் மீது சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனினும் இந்த தாக்குதல் எப்போது மேற்கொள்ளப்பட்டது என்பது இன்னும் உறுதியாகவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

பாகிஸ்தான் சைபர் தாக்குதல் குழுவினரால் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவே காலி மாவட்ட செயலகத்தின் இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாகிஸ்தானுக்கு ஜிந்தாபாத், இஸ்லாம் மதத்திற்கு ஜிந்தாபாத், முஸ்லிம்களுக்கு ஜிந்தாபாத், பாகிஸ்தான் இராணுவத்திற்கு ஜிந்தாபாத் மற்றும் பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. குழுவிற்கு ஜிந்தாபாத் என அந்த இணையத்தள பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

இந்த இணையத்தளங்களுக்குள் ஊடுருவும் குழுவினரால் குறித்த இணையத்தளம் முடக்கப்பட்டதன் பின்னர் அதில் பதிவொன்றை வெளியிட்டுள்ளனர் அதில் காஷ்மீர், சிரியா மற்றும் பாலஸ்தீன் ஆகிய நாடுகள் விடுவிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மொஹமட் பிலால் என்ற குழுவினரால் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் அவர்கள் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர்கள் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Check Also

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது - இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல ”என்னை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ததாக …