முன்னாள் அமைச்சர் ரேணுகா ஹேரத் காலமானார்
ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் அமைச்சரும் மத்திய மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவியுமான ரேணுகா ஹேரத் தமது 72ஆவது வயதில் காலமானார்.
சுகயீனம் காரணமாக கண்டி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சை பலனின்றி இன்று (திங்கட்கிழமை) காலை காலமானதாக தெரிவிக்கப்படுகிறது.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் எதிர்வரும் வியாழக்கிழமை வலப்பனையில் நடைபெறவுள்ளது.
கடந்த 1977ஆம் ஆண்டு நுவரெலியா மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு நாடாளுமன்றத்திற்கு தெரிவான ரேணுகா ஹேரத், முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் ஆட்சிக்காலத்தில் சுகாதார அமைச்சராக பதவி வகித்தமை குறிப்பிடத்தக்கது.




