Sunday , August 24 2025
Home / செய்திகள் / உலக செய்திகள் / கொரோனாவால் 54 ஆயிரம் சிறை கைதிகள் விடுவிப்பு!

கொரோனாவால் 54 ஆயிரம் சிறை கைதிகள் விடுவிப்பு!

கொரோனாவால் 54 ஆயிரம் சிறை கைதிகள் விடுவிப்பு!

கொரோனா அச்சம் காரணமாக ஈரானில் 54 ஆயிரம் சிறைக் கைதிகள் தற்காலிகமாக விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

சிறைக் கைதி ஒருவர் கொரோனா வைரஸின் தாக்கத்திற்கு உள்ளாகி இருந்தமை மருத்துவ பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த நிலையில் , 54 ஆயிரம் கைதிகள் விடுவிக்கப்பட்டதாக நீதித் துறை ஊடகப் பேச்சாளர் குலாம் ஹுசைன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்

எனினும், ஐந்து வருடங்களுக்கு மேலதிகமாக சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள கைதிகள் விடுவிக்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக, ஈரானில் இதுவரை 77 பேர் உயிரிழந்துள்ளதோடு, இரண்டாயிரத்து 336 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் , 435 பேர் முழுமையாக குணமடைந்துள்ளனர்.

இதேவேளை, கொரோனா வைரஸ் காரணமாக சர்வதேச ரீதியில் இதுவரை மூவாயிரத்து 200 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன், 92 ஆயிரத்து 862 பேர் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பயனுள்ள இணைப்புகள் இங்கே

Tamil News
Tamil Technology News
Tamilnadu News
Tamil Serial
World Tamil News

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv