காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை வழங்க வேண்டும்: ரதன தேரர்
வடக்கு மாகாணத்துக்கு காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்படல் அவசியம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதன தேரர் தெரிவித்துள்ளார்.
இலங்கை தேசிய பேரவையின் நிகழ்வில் உரையாற்றும்போது அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
புதிய அரசியலமைப்பின் மூலம் தேசிய இனப்பிரச்சினையை தீர்க்கலாம் என்று பலரும் கூறுகின்ற நிலையில், இதனை தாம் ஏற்றுக்கொள்வதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு மக்களுக்கு காணியும் பொலிஸ் அதிகாரமும் வழங்கப்படவேண்டும் என்பதே தமது நோக்கமென குறிப்பிட்ட ரதன தேரர், காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் வடக்கு மாகாணத்துக்கு பகிரப்படும்போது படையினரின் அதிகாரம் மத்திய அரசாங்கத்தின்கீழ் வைக்கப்படவேண்டுமென இதன்போது வலியுறுத்தினார்.
அத்தோடு படையினரை எந்த தருணத்திலும் வடக்குக்கு அனுப்பக்கூடிய நிலை உருவாக்கப்படவேண்டும் என்றும் ரதன தேரர் குறிப்பிட்டுள்ளார்.




