Wednesday , June 11 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / மீண்டும் ரணில் தலைமையில் நாளை கூடுகின்றது அரசமைப்பு வழிகாட்டல் குழு!

மீண்டும் ரணில் தலைமையில் நாளை கூடுகின்றது அரசமைப்பு வழிகாட்டல் குழு!

கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் நடைபெறவிருந்து பின்னர் ஒத்திவைக்கப்பட்ட அரசமைப்புப் பேரவையின் வழிகாட்டல் குழுவின் கூட்டம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நாளை வியாழக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நடவடிக்கைக் குழுவின் இடைக்கால அறிக்கையை எப்படியாயினும் இந்த மாத முடிவுக்கு முன்னர் இறுதிசெய்து பூர்த்தியாக்கிவிடவேண்டும் என்பதில் உறுதியாகவுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அதன் காரணமாக நாடாளுமன்ற அமர்வுகள் நடைபெறும் சமயம் என்று பார்க்காமல் வழிகாட்டல் குழுவின் கூட்டங்களைக் கூட்டுவதற்கு நடவடிக்கை எடுத்திருக்கின்றார் என்று கூறப்படுகின்றது.

அதனாலேயே நாடாளுமன்ற அமர்வு இல்லாத காலத்திலும் இவ்வாரம் கூட்டம் கூட்டப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.

Check Also

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது - இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல ”என்னை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ததாக …