வடக்கு மாகாணத்துக்கு மூன்று நாள் பயணமாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 19ஆம் திகதி செல்லவுள்ளார். பல்வேறு சந்திப்புக்களையும், ஆராய்வுகளையும் மேற்கொள்ளும் நோக்குடனேயே அவரது இந்தப் பயணம் அமையவுள்ளது எனத் தெரியவருகின்றது.
இந்த மாதம் 19 ஆம் திகதி மன்னார் மாவட்டத்துக்கு பிரதமர் செல்லவுள்ளார். அங்கு பல்வேறு தரப்புக்களையும் சந்தித்துக் கலந்துரையாடல் நடத்தவுள்ளார்.
20 ஆம் மற்றும் 21 ஆம் திகதிகளில் யாழ்ப்பாண மாவட்டத்துக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க செல்லவுள்ளார். பிரதமரின் யாழ்ப்பாணப் பயணத்தின்போது, யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் முக்கிய கலந்துரையாடல்கள் நடைபெறவுள்ளன.
அரச அதிகாரிகளுடன் தனியானதொரு கலந்துரையாடல், அரசியல் தரப்பினருடன் தனியானதொரு கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.