Saturday , May 18 2024
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / ரணில் ஒரு துரோகி என்பதை சத்தம்போட்டு சொல்லுவேன் !

ரணில் ஒரு துரோகி என்பதை சத்தம்போட்டு சொல்லுவேன் !

ரணில் ஒரு துரோகி என்பதை சத்தம்போட்டு சொல்லுவேன் !

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஒரு துரோகி என நாடு முழுவதும் இடம்பெறும் ஒவ்வொரு கூட்டங்களிலும் தான் பகிரங்கமாகவே கூறுவேன், என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்ற விசேட அமைச்சரவைக் கூட்டத்திலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

நேற்றையதினம் இடம்பெற்ற விசேட அமைச்சரவைக் கூட்டத்தில், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிப்பது தொடர்பில் கடுமையான வாக்குவாதங்கள் இடம்பெற்றன.

இதன்போது, ரணில் ஒரு துரோகி , பிரதமர் ரணில் துரோகி எனவும் ஹக்கீம் சத்தமிட்டதாக , அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்றிருந்த அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிக்கவேண்டிய தேவை தற்போதைக்கு இல்லை என்றும், ஜனாதிபதித் தேர்தலுக்கு முகம் கொடுத்ததன் பின்னர், அந்த முறைமையை ஒழிப்பது தொடர்பில் கலந்துரையாடுவோம் எனவும் ஹக்கீம் கூறியுள்ளார்.

இந்த சந்தப்பத்தில் இவ்வாறான யோசனை கொண்டுவரப்படுவது, எதிர் வேட்பாளர்களுக்கு அஞ்சியே கொண்டுவரப்படுவதாக, மக்கள் மத்தியில் பிரசாரங்கள் கொண்டு செல்லப்படும் என்றும், ஆகையால், அது தேவையில்லை எனவும் ஹக்கீம் குறிப்பிட்டதாக குறித்த அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சிறு கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தாது, இவ்வாறு முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதற்கும் ஹக்கீம் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

Tamil News

 

 

 

 

Tamil Technology News

 

Tamilnadu News

 

 

 

 

World Tamil News

 

 

 

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv