Wednesday , October 15 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / இரா­ம­நா­த­பு­ரம் தாக்­கு­தல்: தாயும், மக­னும் மறி­ய­லில்

இரா­ம­நா­த­பு­ரம் தாக்­கு­தல்: தாயும், மக­னும் மறி­ய­லில்

இரா­ம­நா­த­பு­ரம் – மாய­வ­னூர் பகு­தி­யில் மூன்று வீடு­கள் மீது தாக்­கு­தல் நடத்­தப்­பட்ட சம்­ப­வம் தொடர்­பில் சந்­தே­கத்­தின்­பே­ரில் ஒரு­வர் கைது­செய்­யப்­பட்டார்.

அத்­து­டன் கட­மைக்கு இடை­யூறு விளை­வித்த குற்­றச்­சாட்­டில் சந்­தே­க­நப­ரின் தாயா­ரும் கைது­செய்­யப்­பட்டார். இவர்­கள் விளக்­க­ம­றி­ய­லில் வைக்­கப்­பட்­டுள்­ள­னர் – என்று இரா­ம­நா­த­பு­ரம் பொலிஸ் பொறுப்­ப­தி­காரி சது­ரங்க தெரி­வித்­தார்.

இது­தொ­டர்­பில் மேலும் தெரி­விக்­கப்­பட்­ட­தா­வது:
மாய­வனூர்ப் பகு­தி­யில் இரு­தி­னங்­க­ளுக்கு முன்­னர் இர­வு­வே­ளை­யில் வீடு­கள்­மீது தாக்­கு­தல் நடத்­தப்­பட்­டன. ஏழு ­பேர் கொண்ட குழு வீடு­க­ளுக்­குள் புகுந்து தாக்­கி­யது. அங்­கி­ருந்த பொருள் களை அடித்து நொறுக்­கி­யது. வாழைத் தோட்­டங்­க­ளை­யும் சேத­மாக்­கி­யது. பின்­னர் தப்­பிச்­சென்­றது.

சம்­ப­வம் தொடர்­பில் இரா­ம­நா­த­பு­ரம் பொலிஸ் நிலை­யத்­தில் முறைப்­பாடு செய்­யப்­பட்­டது. விசா­ர­ணை­ களை முன்­னெ­டுத்த பொலி­ஸார் சந்­தே­க­ந­பர்­கள் பயன்­ப­டுத்­திய மூன்று மோட்­டார் சைக்­கிள்­க­ளைக் கைப்­பற்­றி­ய­து­டன் சந்­தே­கத்­தின்­பே­ரில் ஒரு­வ­ரைக் கைது­செய்­த­னர். அவ­ ரது தாயா­ரும் பொலி­ஸா­ரா­ல் கைது­செய்­யப்­பட்­டார். பொலி­ஸா­ரின் சேவைக்கு இடை­யூறு விளை­வித்­தார் என்ற குற்­றச்­சாட்­டி­லேயே இவர் கைது­செய்­யப்­பட்டார்.

சந்­தே­க­ந­பர்­கள் இரு­வ­ரும் நேற்­று­முன்­தி­னம் கிளி­நொச்சி நீதி­வான் ­ மன்­றில் முன்­னி­ லைப்­ப­டுத்­தப்­பட்­ட­னர். முத­லா­வது சந்­தே­க­ ந­பரை 14 நாள்கள் விளக்­க­ம­றி­ய­லி­லும், அவ­ரது தாயாரை ஏழு நாட்­க­ளுக்கு விளக்­க­ம­றி­ய­ லி­லும் வைக்­கு­மாறு நீதி­வான் உத்­த­ ர­விட்­டார் – என்­றார்

Check Also

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது - இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல ”என்னை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ததாக …