தினேஷ் குணவர்தனவுக்கு சபை அலுவல்களில் ஈடுபட ஒரு வார காலத்திற்கு தடை
பாராளுமன்ற நிலையியற்கட்டளைகளுக்கு மாறாக செயல்பட்டதினால் பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தனவுக்கு சபை அலுவல்களில் கலந்துகொள்வதற்கு ஒரு வார காலத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அவைத் தலைவர் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்லவினால் குறித்த பிரேரணையை முன்வைத்தார்.
பிரேரணை வாக்கெடுப்பு விடுக்கப்பட வேண்டும் என அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்ததையடுத்து, மேற்கொள்ளப்பட்ட வாக்கெடுப்பில் பிரேரணை 63 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. யோசனைக்கு ஆதரவாக 85 வாக்குகளும், எதிராக 22 வாக்குகளும் வழங்கப்பட்டன.
பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்சவின் தேசிய சுதந்திர முன்னணி, பாராளுமன்றத்தில் சுயாதீனமாக இயங்குவதற்கு கோரிக்கைக்கு சபாநாயகர் மறுப்பு தெரிவித்தார். இதனையடுத்து சபையில் பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன பாராளுமன்ற விதிமுறைகளை மீறி நடந்துகொண்டார். இதனால் தினேஷ் குணவர்தனவை சபையில் இருந்து வெளியேறுமாறு சபாநாயகர் உத்தரவிட்டதோடு, சவையை 10 நிமிடத்திற்கு ஒத்திவைத்தார்.
சபை நடவடிக்கைகள் 3 முறை ஒத்திவைக்கப்பட்டதோடு, தினேஷ் குணவர்தனவை சபையிலிருந்து வெளியேற்றுமாறு பாராளுமன்ற பாதுகாப்பு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதோடு, அவசியம் ஏற்படுமிடத்தில், பொலிசாரின் உதவியைப் பெறுமாறும் சபாநாயகர் அறிவித்தார். தினேஷ் குணவர்தன வெளியேற மறுப்பு தெரிவித்தார்.




