ஜனாதிபதி ஆணைக்குழுவின் கண்காணிப்பில் திறைசேரியின் முறி விநியோகம்
திறைசேரி முறி விநியோகத்தின் போது கடந்த காலத்தில் பாரிய ஊழல் மோசடி இடம்பெற்றதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நிலையில், மத்திய வங்கியில் இன்று (புதன்கிழமை) நடைபெறவுள்ள முறி விநியோகத்தை நேரடியாக கண்காணிப்பதற்காக ஜனாதிபதி ஆணைக்குழு மத்திய வங்கிக்கு சென்றுள்ளது.
பிணை முறி மோசடி குறித்து கண்டறிவதற்காக அண்மையில் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட குறித்த ஆணைக்குழுவின் முன்னிலையிலேயே இன்றைய முறி விநியோகம் இடம்பெறவுள்ளது.
இன்றைய தினம் திறைசேரியின் 24ஆயிரம் மில்லியன் ரூபாய் பெறுமதியான முறிகள் ஏலத்தில் விடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.




