Sunday , June 29 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / இலங்கை பிரஜைகள் என்றாவது எங்களை மதியுங்கள்; சரஸ்வதிகுடியிருப்பு மக்கள் ஆதங்கம்

இலங்கை பிரஜைகள் என்றாவது எங்களை மதியுங்கள்; சரஸ்வதிகுடியிருப்பு மக்கள் ஆதங்கம்

மக்களுக்கு சேவை செய்வதாக பெருமிதம் வெளியிடும் அரசாங்க உத்தியோகத்தர்கள் ஒருவரேனும் தங்களை வந்து பார்வையிடவில்லை என்று பன்னங்கண்டி – சரஸ்வதிகுடியிருப்பு மக்கள் ஆவேசம் வெளியிட்டுள்ளனர்.

மலையக வம்சாவளிகள் என்ற காரணத்தால் புறக்கணிக்கப்பட்டாலும் இலங்கை பிரஜைகள் என்ற காரணத்தினாலாவது தம்மை மனிதர்களாக மதியுங்கள் என்றும் இரந்து கோரியுள்ளனர்.

நிரந்தர காணி உரிமைப்பத்திரத்தை வழங்கினால் மாத்திரமே போராட்டத்தைக் கைவிடுவோம் என்ற எச்சரிக்கையுடன் சரஸ்வதிகுடியிருப்பு மக்கள் முன்னெடுத்துவரும் போராட்டம் இன்று, 27 ஆவது நாளாகவும் தொடர்கின்றது.

எனினும் குறித்த மக்களது பிரச்சனை தொடர்பாக எவரும் பெரியளவில் கவனம்செலுத்துவதில்லை என்று குற்றம்சுமத்தியுள்ள மக்கள், தீர்வு வழங்கப்படும் வரை போராட்டம் தொடரும் என்று உறுதியாக தெரிவித்துள்ளனர்.

Check Also

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது - இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல ”என்னை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ததாக …