Tuesday , August 26 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / பெற்­றோ­ருக்கு முழு அறிவு வேண்­டும்!

பெற்­றோ­ருக்கு முழு அறிவு வேண்­டும்!

மாண­வர்­கள் காப்­பீட்­டுத்­திட்­டம் தொடர்­பாக பெற்­றோர்­க­ளும் பூர­ண­மாக அறிந்து வைத்­தி­ருக்­க­வேண்­டும்.

காப்­பு­றுதி பெறு­வ­தில் கடப்­பா­டு­கள் இருக்­கின்­றன. எனவே பெற்­றோர் அதைப்­பற்­றிய விளக்­கத்­து­டன் இருந்­தாலே உரிய நன்­மையை இல­கு­வா­கப் பெற்­றுக்­கொள்­ள­லாம்.

வவு­னியா சைவப்­பி­ர­காச மக­ளிர் கல்­லூ­ரி­யில் இல­வச காப்­பீட்­டுத்­திட்­டத்தை மாண­வர்­க­ளுக்கு அறி­மு­கம் செய்­யும் நிகழ்­வில் முதன்மை விருந்­தி­ன­ராக கலந்­து­கொண்டு உரை­யாற்­றிய வலய கல்­விப்­பி­ர­தி­நி­தி­யும் தமிழ்­பாட ஆசி­ரிய ஆலோ­ச­க­ரு­மான நிறை­மதி தெரி­வித்­தார். அவர் மேலும் தனது உரை­யில் தெரி­வித்­த­தா­வது:

மாணவ சமூ­கத்தை முன்­னேற்­று­ வ­தன் மூலம் இந்த சமூ­கத்தை முன்­னேற்ற முடி­யும். இதற்காக ஏற்­க­னவே அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்ட இல­வ­சக்­கல்வி இன்று விரி­வ­டைந்து மாண­வர்­க­ளுக்­கு­ரிய உடல் உள நிலை­யைப் பேணுகின்ற ஒரு திட்­ட­மாக இந்த சுரக்க்ஷா காப்­பீட்­டுத்­திட்­டம் ‘என்­றும் காப்­போம் தேசத்­தின் பிள்­ளை­களை’ என்ற மகு­ட­வா­ச­கத்­து­டன் செயற்­ப­டு­கின்­றது.

மாண­வர்­க­ளுக்கு கற்­ற­லுக்­குத் தடை­யாக இருப்­ப­தும் மாண­வர்­க­ளு­டைய பெற்­றோர்­க­ளுக்கு ஒரு சுமை­யாக இருப்­ப­தும் கல்வி சார்ந்த செல­வு­கள். செல­வு­கள் கார­ண­மாக மாண­வர்­க­ளின் கல்வி இடை­ந­டுவே தடைப்­ப­டவோ அல்­லது கல்­வி­யிலே ஒரு ஊக்­க­மின்மை ஏற்­ப­டவோ வாய்ப்­புக்­கள் இருக்­கின்­றன. எனவே தடையை உடைத்­தெ­றி­யும் நோக்­கத்­தில் அரசு பல்­வேறு திட்­டங்­களை முன்­வைத்து வரு­கின்­றது. அதிலே ஒரு திட்­ட­மாக இந்­தக் காப்­பு­று­தித்­திட்­டம் விளங்­கு­ கின்­றது.

Check Also

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது - இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல ”என்னை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ததாக …