தமிழர்களின் எதிர்ப்பை சுமந்திரன் சம்பாதிக்கிறார்
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் விரும்பியோ விரும்பாமலோ தமிழ் மக்களின் எதிர்ப்பை சம்பாதித்துக் கொண்டுள்ளதாக அடக்கு முறைக்கு எதிரான ஜனநாயக அமைப்பின் தலைவர் மு.தம்பிராசா தெரிவித்தார்.
தனது அரசியல் வாழ்க்கையில் மக்களின் எதிர்ப்பினை சம்பாதித்தமை அவர் செய்த தவறு எனவும் அவர் குறிப்பிட்டார். யாழ்ப்பாண ஊடக அமையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனின் அரசியலில் மாற்றம் ஏற்படும் வரை அவருக்கு எதிரான எதிர்ப்பலைகள் குறையாது எனவும் அவர் குறிப்பிட்டார்.




