மீதொட்டமுல்ல குப்பைமேடு சரிவினால் உயிரிழந்த மக்களுக்கு மலையகத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
நுவரெலியா டயகம மேற்கு 5ஆம் பிரிவு தோட்ட மக்கள் இன்று (திங்கட்கிழமை) முற்பகல் இவ் அஞ்சலி நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர். குப்பைமேடு சரிவில் உயிரிழந்தவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏற்றியும் விழிப்புணர்வு பதாதைகளை ஏந்தியும் ஒரு நிமிடம் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
மேலும், பாதிக்கப்பட்டவர்கள் விரைவாக இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப வேண்டும் என பிரார்த்திப்பதாகவும், அவர்களுக்கு வெகு விரைவில் நிவாரண உதவிகள் கிடைக்க வேண்டும் என்றும், இவ்வாறான சம்பவம் இனிமேலும் நடக்க கூடாது எனவும் அஞ்சலி நிகழ்வில் கலந்துகொண்ட மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.