கேகாலை மாவட்டம், மாவனெல்ல நகரில் மண் மேடொன்று சரிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்ததுடன், இருவர் மண்ணுக்குள் புதையுண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
கட்டட நிர்மாணப் பணிகள் இடம்பெற்றுவந்த பகுதியொன்றிலேயே மேற்படி அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், மண்ணுக்குள் புதையுண்டவர்களை மீட்கும் பணிகளில் பொலிஸாருடன் இணைந்து பொதுமக்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.