Saturday , June 28 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / இந்தோனேசியாவுக்கு பறந்த மைத்திரி

இந்தோனேசியாவுக்கு பறந்த மைத்திரி

இந்தோனேசியாவுக்கு பறந்த மைத்திரி

இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில் ஆரம்பமாகியுள்ள இந்து சமுத்திர பிராந்திய நாடுகளின் அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரி இன்று (திங்கட்கிழமை) காலை 7.30 மணியளவில் அந்நாட்டிற்கு புறப்பட்டுச் சென்றுள்ளார்.

அரச தலைவர்களின் பங்குபற்றுதலுடன் நடைபெறும் இம் மாநாட்டில், ஜனாதிபதி மைத்திரி நாளைய தினம் பங்கேற்கவுள்ளார். அதனைத் தொடர்ந்து பல்வேறு நாடுகளின் அரச தலைவர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளார். அத்தோடு, இந்தோனேசிய ஜனாதிபதியையும் சந்திக்கவுள்ளார்.

இதேவேளை, இம் மாநாட்டுடன் சில உடன்படிக்கைகளும் கைச்சாத்திடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை அரச தலைவர்களின் மாநாட்டிற்கு நிகராக இந்து சமுத்திர வலய நாடுகளின் அமைச்சர்களுக்கான மாநாடும் ஜகார்த்தாவில் நடைபெறுகிறது. இம் மாநாட்டில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர கலந்துகொண்டுள்ளார்.

 

Tamil News

 

 

 

 

Tamil Technology News

 

Tamilnadu News

 

 

 

 

World Tamil News

 

 

 

 

World Newspapers And sites

Check Also

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது - இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல ”என்னை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ததாக …