முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஜப்பானுக்குச் சென்றுள்ளார்.
நேற்றுமுன்தினம் இரவு 07.15 மணிக்கு இலங்கையிலிருந்து அவர் தனது பயணத்தை ஆரம்பித்தார் விமான நிலையத் தகவல்கள் தெரிவித்தன.
ஜப்பானிலுள்ள இலங்கையர்கள் விடுத்த அழைப்பின் பேரில் அங்கு சென்றுள்ள அவர், சமய நிகழ்வொன்றில் கலந்துகொள்ளவுள்ளார் எனவும் தெரியவந்துள்ளது.
இதேவேளை, மஹிந்த ராஜபக்ஷவுடன் இந்த விஜயத்தில் ரொஷான் ரணசிங்க, பியல் நிஷாந்த ஆகிய நாடாளுமன்ற உறுப்பினர்களும் இணைந்துகொண்டுள்ளனர்.