Tuesday , August 26 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / மகா­தேவா சிறு­வர் இல்ல குழப்­ப ­நி­லையை

மகா­தேவா சிறு­வர் இல்ல குழப்­ப ­நி­லையை

கிளி­நொச்சி மாவட்­டத்­தில் உள்ள மகா­தேவா சிறு­வர் இல்­லத்­தில் தற்­போது ஏற்­பட்­டுள்ள திடீர் குழப்­ப­ நிலை தொடர்­பில் ஆராய்ந்து விசா­ரணை அறிக்கை சமர்ப்­பிக்க குழு­வொன்று நிய­மிக்­கப்­பட வேண்­டும் என வடக்கு மாகாண அவைத்­த­லை­வர் சி.வி.கே.சிவ­ஞா­னம் வலியுறுத்தினார்.

வடக்கு மாகாண சபை­யின் 111ஆவது அமர்வு நேற்­றை­ய­ தி­னம் கைதடியில் இடம்­பெற்­றது. இந்த அமர்­வில் வடக்கு மாகாண சபை உறுப்­பி­ னர் ஜெய­சே­க­ரம் மகா­தேவா சிறு­வர் இல்­லத்­தில் உள்ள திடீர் குழப்­ப­நிலை தொடர்­பில் மாகாண சபை தலை­யிட்டு பிரச்சி­னையைத் தீர்க்க வலி­யு­றுத்தி பிரே­ரணை ஒன்றை முன்­மொ­ழிந்­தார்.

பிரே­ர­ணையை வழி­மொ­ழிந்த அரி­ய­ரட்­ணம் கருத்துத் தெரி­விக் கும் போது:கிளி­நொச்சி மகா­தேவா சிறு­வர் இல்­லத்­தில் 366 பிள்­ளை­கள் வரை­யில் பரா­ம­ரிப்­பில் உள்­ள­னர். அங்­குள்ள ஒரு பிள்­ளை­யின் ஒருநாள் உண­வுக்கு மாத்­தி­ரம் 200 ரூபாய் வரை­யில் தேவைப்­ப­டு­கின்­றது. சிறு­வர் இல்லத்­துக்­கான நிதி உள்­ளூர் மற்­றும் புலம்­பெ­யர் நாடு­க­ளில் இருந்து கிடைக்­கின்­றது.

ஆனால் அதன் தலை­வர் இறந்­த­தும் தற்­போது அங்கு குழப்­பம் ஏற்­பட்­டுள்­ளது. எனவே மாகாண அமைச்­சர்­கள் நேர­டி­யா­கச் சென்று அதனை ஆராய வேண்­டும் –என்­றார்.அதன் பின்­னர் கருத்து தெரி­விக்­கும்­போது அவைத்­த­லை­வர் குறிப்­பிட்­ட­தா­வது:மகா­தேவா சிறு­வர் இல்­லத்­தில் ஏற்­பட்­டுள்ள திடீர் குழப்­ப­நிலை தொடர்­பில் சுகா­தார அமைச்­சர் குண­சீ­லன் மற்­றும் சமூக சேவை­கள் அமைச்­சர் அனந்தி ஆகி­யோர் இணைந்து ஆரா­யுங்­கள்.

Check Also

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது - இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல ”என்னை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ததாக …