கால அவகாசம் கொடுப்பதற்கு கூட்டமைப்பு யார் ?
இணக்க அரசியல் என கூறிக்கொண்டு, சம்பந்தமற்ற கருத்துக்களை தமிழ் அரசியல்வாதிகள் வெளியிடுவதாக சம உரிமைக்கான மக்கள் இயக்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.
யாழ் ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் பங்கேற்று கருத்து வெளியிட்ட, புதிய மாக்ஸ்சிச லெனின் கட்சியின் பொதுச் செயலாளர் சி.க செந்திவேல், இரண்டு வருட காலஅவகாசம் வழங்குவதை அமெரிக்காவும் மேற்குலகமுமே தீர்மானிக்கின்றது என குறிப்பிட்டார்.
வவுனியாவில் நேற்றுமுன்தினம் ஒன்று கூடிய தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகள் அங்கு போராட்டம் நடத்திவரும் மக்களைக் கூட நேரில் சென்று சந்திக்கவில்லை எனக் குற்றஞ்சாட்டியுள்ளார்.




