கேப்பாப்புலவு – பிலவுக்குடியிருப்பு மக்களின் காணிகள் அளவீடு
கேப்பாப்புலவு – பிலவுக்குடியிருப்பு மக்களுக்கு சொந்தமான காணிகளை விடுவிப்பதற்கு அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், குறித்த காணிகள் நிலஅளவை திணைக்கள அதிகாரிகளினால் இன்று காலை அளவீடு செய்யப்படுவதாக முல்லைத்தீவு கரைத்துறைப்பற்று பிரதேச செயலாளர் சி.குணபாலன் தெரிவித்தார்.
மக்களின் சொந்த காணிகள் விடுவிக்கப்படும் அதேவேளை, தற்காலிகமாக வழங்கப்பட்ட காணிகள் மீள பெறப்படும் வாய்ப்பு உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.




