கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் 650 இற்கும் அதிகமான குற்றவாளிகள் கைது செய்யப்பட்டபோதும், பொதுபல சேனாவின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர் இன்னமும் கைது செய்யப்படவில்லை.
நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட குற்றவாளிகளைத் தேடி நவீன தொழிநுட்ப வசதிகளைக் கொண்டு சுமார் நான்கு மணிநேரம் மேற்படி தேடுதல்கள் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மிகத்தீவிரமாகத் தேடப்பட்டுவரும் நபர்களின் பட்டியலில் ஞானசார தேரரின் பெயரும் உள்ளடக்கப்பட்டிருப்பதால் மேற்படி தேடுதல் நடவடிக்கைகளில் அவரைத் தேடியும், அவர் தொடர்பான தகவல்கள் எதனையும் பெற முடியவில்லையென குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.