யாழ் பல்கலை கலைப்பீட மாணவர்களின் உண்ணாவிரதப் போராட்டம் துணைவேந்தரின் எழுத்து மூல அறிக்கையை அடுத்து முடிவுக்கு வந்துள்ளது.
கடந்த இரண்டு நாட்களாக வகுப்பு தடை விதிக்கப்பட்ட மாணவர்களை மீளவும் இணைக்க கோரி பல்கலைக்கழக மாணவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
அந்தவகையில் இன்றைய தினம் (01) காலையில் நிர்வாகத்தினர் மாணவர்களின் கோரிக்கைகளை ஏற்று வகுப்புத்தடையினை இரத்து செய்தனர்.
எதிர்வரும் திங்கட்கிழமை (3) வழமைபோல் விரிவுரைகள் இடம்பெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.